வேத வனம் -விருட்சம் 39
எஸ்ஸார்சி
அக்கினி அறிஞன்
அறிஞர்களின் தடம் தெரிந்தோன்
இருட்டின் கதவுகள் திறப்பவன்
போற்றிப்பாட
துதித்துப்புகழந்திட வளர்பவன்
தண்ணீரின் கரு அவன்
நீரின் நண்பன்
மனிதர் இல்லம் நடுவே
தேவர்களால் கொணரப்பட்டவன்
தூண்டிட அவன்
துணை வருவான்
வழிகாட்டி
வருணன்
அக்கினி ஒளியைப்பொழிபவன்
அமைச்சன் அவன்
வீட்டுச்சேவகன் அவனே
ஒடும் நதிகளுக்கு
உயர்ந்த பர்வதங்களுக்கு
தோழன் அக்கினி.
நீரைச்செய்தவன் அக்கினி
நீரைக்காப்பவன் அவனே
சுத்தன் அவன்
சர்வ வியாபி
நெருப்பும் நிலமும்
அவன் பெற்றோர்
பெற்றோரை எப்போதும் புதுக்குபவன் அக்கினி ( ரிக் 3/5)
விபாசா சுதுத்ரி இரு நதிகளே
நீங்கள் கடலுக்குப்பாயும்
கடிவாளம் தளர்ந்த புரவிகள்
கன்று முகம் காண விரை
இரு பசுக்கள்
விசுவாமித்திர முனியே
நிலம் வளம் பெற்றது
நாங்கள் கடலுக்குப் பயணம் செய்கிறோம்
சோமம் கொணர எனது பயணம்
வழி தாருங்கள் நதிகளே
விருத்திரன் எங்கள் தடம் அழிக்க
இந்திரன் வச்சிராயுதன்
அவனை முடிக்க
தேவ சவிதா
எங்கள் நீர்த்தடம் வழிப்படுத்தினான்
br>
ஆம் நதிகளே
இந்திரன் மிகுவீரன்
நதிகட்கு வாழ்வு தந்தவன்
அஹியை த்துணித்தவன்
சிரேட்ட முனியே
மறவாதிரும் இம்மகிமையை
காலம் காலமாய்
புவி வரு சனங்கள்
இதை ப்போற்றிப்புகழட்டும்
கவி நீ உன் சூக்தங்களில்
எம் அன்பைக்கொண்டு தா
மனிதரிடை எம்மை நீ உயர்த்து
வணக்கம் சொல்கிறோம் உமக்கு
குழவிக்குப் பால்முலைகாட்டும் அன்னையாய்
கணவன் மார்புதழுவும் தாரமாய்
உம்மைப்பணிகிறோம் யாம்
முனி நதி கடந்தான்
ஆவினம் தேடும்
பரத சனம் நதி கடந்தது
நதிகளே வளம் தாரும்
அன்னமாய் அள்ளித் தாரும்
நிறைக நிரப்புக
சீறுக பாய்ந்தோடுக ( ரிக் 3/33 )
essarci@yahoo.com
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்
- நல்லது … கெட்டது.
- பேசும் மௌனங்கள்…
- மென்மையான உருளைக்கிழங்குகள்
- அவன்
- ஹேண்டில் பார்…
- ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 1
- ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 2
- பதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்
- வாணிமஹால்
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 1
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 7
- விளம்பரம்
- கண்ணீர்ப் பிரவாகம்
- வேத வனம் -விருட்சம் 39
- முத்துக் குளியல்
- கனவுப் பெண்ணின் புன்னகை
- மலை உச்சியில் கரையும் மரவீடுகள் ( குறுநாவல் பாகம் 1 )
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி ? >>
- ஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்…….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1
- நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்கிறது !
- விமர்சனக் கடிதம் – 4
- இன்னும் கொஞ்சம் … நட்புடன்!
- நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் ‘கெவின் லிஞ்ச்’ இன் நகரொன்றின் பிம்பக்’ கோட்பாடு பற்றிய புரிதலு
- சங்கச் சுரங்கம் – 20: மலைபடு கடாம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தொன்று
- கைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா? – ‘பசங்க’ திரைப்பட விமர்சனம்
- மீறும் பெண்மையின் சித்திரம் -(சல்மா கவிதைகளை முன்வைத்து)
- கி பி அரவிந்தன் நூல் வெளியீட்டு விழா
- அறிவியல் புனைகதை: நான் எங்கிருக்கிறேன்? நான் யார்?
- கவிதா ஜெயச் சந்திரன் -நேச குமாரின் கட்டுரைகளைப் பற்றி
- உன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
- சொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்
- தொடக்கத்திலிருந்து வந்து தொலைகிறேன்