மனதின் கையில்… .. ..

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

சித. அருணாசலம்


மரம் அமைதியைத் தான் விரும்புகிறது – ஆனால்

காற்று விடுவதாயில்லை.

மழை அமைதியைத் தான் விரும்புகிறது – ஆனால்

மேகம் விடுவதாயில்லை.

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது – ஆனால்

ஆசை விடுவதாக இல்லை.

காதல் அமைதியைத் தான் விரும்புகிறது – ஆனால்

காமம் விடுவதாயில்லை.

மேகத்தையும், காற்றையும்

வேகத்தைக் கட்டுப்படுத்தச் சொல்ல முடியுமா?

ஆசையையும், காமத்தையும்

அளவாக்கிக் கொள்ளலாம் அல்லவா?

நிறைவாக ஒன்று இருக்கும் போது – அதில்

குறை சேர்வதற்கு மற்றது அவசியமா?

இவற்றையெல்லாம் இணைத்திருப்பது

இறைவன் படைப்போ – இல்லை

இயற்கையின் நியதியோ?

கட்டுப்பாடு என்பது

மனிதனின் கையில் – அதுவும்

மனதின் கையில் மட்டும்.

-சித. அருணாசலம்.

Series Navigation

சித. அருணாசலம்

சித. அருணாசலம்