நிலவற்ற மழை இரவில்

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

அறிவுநிதி


நிலவற்ற மழை இரவில்
அவனுக்கும் எனக்கும் ஒரு விவாதம் தொடங்கியது
கடவுள் பற்றியும் மழை பற்றியும்
கடும் சொற்களை வீசுகிறான்
சொற்கள்கொண்டே தடுக்கிறேன்
எதிர்க்க முடியாத சொற்கள் நேராக என்மீது
மழையை என் கண்களில் வடித்துகாட்டியும்
கடவுளின் செயல்களை உச்சரித்தும்
விவாதம் திசை திரும்பவில்லை
நச நசக்கும் மழையும்
பெருங்கொண்ட மழையும்
அவனது அவநம்பிக்கையானது
கடவுளை மழைக்குள் எறிகிறான்
கடவுள் நனைந்துகொண்டு
எனக்கு சாதகமாகவே பேசத் துவங்கினார்
மழையும் மழை கலந்த வாழ்க்கையுமென
அவன் ஒரு வன்முறையாளனைப் போல
எதிர்கொள்ளமுடியாத கோபம்கொள்கிறான்
மழைவெள்ளத்தின் இழப்பு பற்றியும்
அழத் தெரியாத கடவுள் பற்றியும்.

அறிவுநிதி
சிங்கப்பூர்

Series Navigation

அறிவுநிதி

அறிவுநிதி