சென்ரியு – நகைப்பாக்கள்

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

மாமதயானை


வழிப்போக்கனின்
பசி போக்குமா……
உணவு பற்றிய பாடல்.

தேவாலய மணியோசை
கேட்கும் பொழுதெல்லாம்;;….
சாத்தானின் ஞாபகம்.

கனவில் தினமும்
தோள் சாய்கிறாள்….
விவகரத்தான மனைவி.

தவழ்கிறது குழந்தை
சிரிக்கிறது குழந்தை….
இறந்த பிறகும் மனதில்.

அதிவேகமாய் ஓடினான்
ஓட்டபந்தயவீரன்;;;;;;;;;…….
அடுத்தவீட்டுப்பெண்ணுடன்.


– மாமதயானை
manisen37@yahoo.com

Series Navigation

மாமதயானை

மாமதயானை