தாகூரின் கீதங்கள் – 9 ஆத்மாவைத் தேடி !

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


அறுவடை மாதங்களில் பரபரப்பாகப்
புத்தொளி வீசும் வேளைகளில்
புல்லிலைகள் போர்த்திய
புவித் தளமும் நடுங்குகிறது !
அப்போது நான் தேடுகிறேன்
என் ஆத்மாவை !
பூரிப்பில் மூழ்கிவிடும் என் இதயம் !
தெரியும் எனக்கு
வாய் மொழியாத அந்த
வரிகளை !

மௌன பூமியின் மனத்திலே
எப்போதும்
உயிருடன் உலவி வருவது
ஓருணர்ச்சி !
ஈருடல் இணைந்த
நம் ஆத்மக் கூட்டுறவிலே
நீயும் நானும்
முடிவில்லாத யுகங்களில்
நீடித்திருக்க வேண்டும் !
இலையுதிர் காலத்துப் பொன்னொளியில்
நிலை தடுமாறினோம்
பல்லினத்துப்
புல்லிலைகள் மீதிலே !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 24, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா