புதியமாதவி
எங்கள் தேசப்பிதாவைக்
காணவில்லை
கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு
மும்பை மாநகரை
முழுசா கொடுக்கிறொம்
எங்கள் தேசப்பிதாவை
தொலைத்துவிட்டோம்
குண்டு மழையில்
குருதி வெள்ளத்தில்
மிதக்கிறது
எங்கள் சுதந்திர பூமி
தண்டவாளங்களில்
வெடித்துச் சிதறுகிறது
அஹிம்சைத் தேவியின்
அனாதைக் கனவுகள்
எங்கள் தேசப்பிதாவை
தொலைத்துவிட்டோம்
கண்டு பிடித்து கொடுப்பவருக்கு
அரபிக்கடலை ஆஸ்தி ஆக்குவோம்
அமெரிக்க வல்லரசின்
அணு ஆயுத ஒப்பந்தங்களின்
சாட்சியாக
செங்கோட்டையில்
பறக்கிறது
எங்கள் மூவர்ணக்கொடி
மித்தி நதியின்
குடிசை வானத்தில்
செயற்கை கோள்கள்
சீறிப்பறக்கின்றன.
எங்கள் தேசப்பிதாவை
தொலைத்துவிட்டோம்
கண்டு பிடித்து கொடுப்பவருக்கு
இமயப் பெருமலையை
எடுத்துக் கொடுத்திடுவோம்
திருவிழாவில்
குழந்தைகளைத் தொலைத்த
பெற்றவர்கள் உண்டு
நாங்களொ
தந்தையே
சுதந்திர தேவியின்
மணிவிழா மண்டபத்தில்
உன்னைத் தொலைத்துவிட்டோம்.
முன்னாபாயின்
முகவரியில் இருப்பதாய்
வெள்ளித்திரையில்
விளம்பரம் போட்டார்கள்
எட்டிப் பார்த்து
ஏமாந்து போனோம்
எங்கள் தேசப்பிதாவை
காணவில்லை..
கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு
இந்திய தேசத்தையே
இனாமாய்க் கொடுக்கிறோம்
எங்கள் தேசப்பிதாவைத்
தொலைத்துவிட்டோம்….
எங்கள் தேசப்பிதாவே…
வெள்ளையரின் ஆட்சியில்
விடிவெள்ளியாய் நீ
கொள்ளையரின் ஆட்சியில்
இருண்டு போனாய்.
கோட்சேயின் குண்டுகளில்
உயிர்த்து எழுந்த உன்னை
ராமபிரானின் அம்புகளால்
எங்கள் அரசியல்வாதிகள்
சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.
எங்கள் தேசப்பிதாவே
எங்கள் தலைவர்களை
மன்னித்துவிடு
அவர்களைத் தலைவர்களாக்கிய
எங்களையும் மன்னித்துவிடு.
எங்கள் தேசப்பிதாவே
நீ எங்களுடன் இருந்தால்
எதையும் சாதிக்கலாம்
அரசியல் வாதியை
அடியாள் ஆக்கலாம்
கூட்டணிக்குள்
கூட்டணி அமைக்கலாம்
எம்.பி , எம்.எல்.ஏக்களை
விலைக்கு வாங்கலாம்
எங்கள் சுதந்திர இந்தியாவில்
இந்து இசுலாம்
கிறித்தவன் சீக்கியன்
யாராக இருந்தாலும்
உன் புன்னகைக்காகவே
தவமிருக்கிறார்கள்
கறுப்பு வெள்ளையாய்
எப்போதும் புன்னகையுடன்
இந்திய தேசத்தின்
மதிப்பாய் வாழும்
எங்கள் தேசப்பிதாவே
உனக்கு எங்கள் அஞ்சலி.
puthiyamaadhavi@hotmail.com
- “முகமிழக்கும் தருணம் இரவில்தான்”
- அணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது ? – 5
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9
- கொழுக்கட்டைச் சாமியார் கதை
- எங்கள் தேசப்பிதாவே
- அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்
- Marappachi Presents Kaalak Kanavu A Docu – Drama on Women in Public Space in Tamil Nadu
- தொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)
- “படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்
- சாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி
- தைலம்
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்
- எழுத்துப் பட்டறை
- புக்குத்தீமா சமூகமன்றத்தின் பட்டிமன்றம்
- ஹெண்டர்சனின் 20-வது பட்டிமன்றம்
- Nfsc announces the Release of Video Documentary “Folklore of the Transgender Community in Tamil Nadu”.
- பூகம்பம்
- தமிழர் திருமகன் இராமன்
- காதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு !
- தீபாவளி
- கவிதைகள்
- சொற்களைத்திருடிய வண்ணத்திகள்…
- கவிதை
- நீங்கள் செய்வது என்ன…? ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2
- நீரால் அமையும்
- பொற்கொடியும் பார்ப்பாள்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1
- கால நதிக்கரையில்……(நாவல்)-26
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 30
- அவருடைய புகழுக்குப் பின்னால்