போர்ச் சேவல்

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

டீன்கபூர்


திரை விலகி
ஒரு நாள் திரை மூடும்.
வருந்தி கண்கள் அகழ்ந்த அருவியில்
அமிழும்.
தேசங்களின் மீதம்;; கரைக்கப்படும்.

தவறியது மிதமாகி
பனியாகி உருகிய சுதந்திரம்
கொல்லன் வசைத்த இரும்பாகி இரும்பாகி.
ஆயினும் உத்தரவோடு காய்ந்த புண்
தாக்கப்பட்டு தகர்க்கப்பட்டு.
தேசத்தின் பூச்சியின்
இடுப்பிலும் ஒரு காயம்.

நாவுகளை நனைக்கும் ஆடுகள்
மேய்ந்து
மேய்ந்து
நாடுகள் நாடுகளாய்
கடிக்கின்ற
தளிரில் சுதந்திரம் காயப்பட்டு
சாவடிக்கப்பட்டு
புதைக்கப்பட்டுக்;கிடக்கிறது.

மன்னிப்பு எங்கு.
மனிதம் எங்கு.
மகிமை எங்கு
வண்டுகளும் குண்டுகளைக் கொட்டும்
தும்பிகளும் போட
கற்கும் இனி பாடசாலை ஒன்றில்.

ஒரு பூனையை வதைத்தமைக்கு
சிறைவாசம்.
பகுத்தறிவில் வாழ்வதற்கு.
நஞ்சுப் புகை வதைப்பது யாரை?
அணுக்குண்டு யாருக்கு என்று
பூமியோ,
புனிததலமோ,
என்று வாகனம் ஓட்டும்
பாணிக்கொண்டை போர்ச் சேவல்
கூவுவது யாருக்கும் கேட்கிறதா?

மூக்கை நுழைக்க
மூளைக்குள் யாரும்
முனைய வேண்டியது இல்லை.

குண்டும்
வானு}ர்தியும்
நாட்டின் உயர்வாய் பறக்கின்றன.
நாளை மற்றொரு நாட்டின்,
ஒரு ஊரின்
முதுகு முள்ளைக் கழற்ற.

தாயே!
பொறுக்கு கற்களை.
உன் குழந்தை எழுந்து நிற்கிறான்.
நாளை பாதங்களை வரிசைப்படுத்துவான்.
ஜனனித்த தெருவில்.

மண் மனிதன்;

கலைந்த தென்றலில்
இறகு உயிர் பறந்து செல்ல
வழி தவறி
ஒரு மர நிழல் அழுதது.

சுவர்ப்; பூனை
அரைக் கண்ணில் ஓய்வு பெற
நிலா வந்து
ஓடு பிரித்து
து}க்கத்தைக் கொத்தியது.

ஓசையற்று
ஏதிரியின் எச்சில்
உலகமே அயராத உயிரின் தோளில் கழிந்தது.

நாய்க் கயிறு
அறுந்ததில்
உயிரின் பெறுமானம்
ஒரு குண்டுக்கும் தெரியாமல் எழுதப்பட்டுவிட்டது.

மண் மனிதன்,
மண்ணுக்கு அனுப்பிவிட
யுத்த விலாசம் பொறிக்கப்படுகிறது.

விமானம் வெளிக்கிட்டு.
திக்குத் தெரிந்த
ஒரு பூவன நாட்டைத்தேடி
நகரத்தைத் தேடி….
எல்லா மாளிகைகளும் நடுங்கத் தொடங்கும்.
எல்லா மலர்களும் வாடத் தொடங்கும்.
எல்லா உயிர்களும் ஒதுங்கப் பார்க்கும்.

மண் மனிதன்
இங்கிருந்தும் அனுப்பப்படுவான்.

குழந்தையும்
தாயும்
அழும் ஓசை
வானத்தைப் பிளந்து
கிரக வழிப் பயணத்தில்.
ஆக,
தணலான மண்ணுக்குள்ளேயே
கசியுமா சுதந்திரம்.
நரி ஊளையிடும் நாட்டில்.

டீன்கபூர்

deengaffoor7@yahoo.com

Series Navigation

டீன்கபூர் - இலங்கை

டீன்கபூர் - இலங்கை