றகுமான் ஏ. ஜெமில்
ஒரு பனித்துளியளவிலான தயவுமின்றி
என் சாந்தமான முகத்தை
குலைத்துவிடும்படியான காட்டோித்தனத்தை
எந்தப் பிசாசின் நடத்தையிலிருந்து காவிற்றாய்
இத்தனை கொடூரத்தனமாக.
உன்னை விரசமூட்டும்படியாக
உப்பிநிற்கும் முலைகளோ
வெடித்த கொச்சிப்பழ உதடுகளோ
அன்றி பெருத்த தொடைகளென்றான
எந்த உறுப்புகளும் என்னிடத்திலில்லை.
ஆறுவயது நிரம்பியபடியாக
குறும்புகள் காட்டி கிடுகிடுத்தோடும்
நின் செல்லம்போன்றே நானும்
என் பிஞ்சுமுகத்தை கொஞ்சுவதற்கு மாறாக
ஒரு அத்துமீறலையே நடாத்திவிட்டாய்
இந்தப் புள்ளப்பூச்சியின்மீதாக.
மறுபடியும் மறுபடியுமாக
சித்திரமொன்றை அளித்தளித்து வரைந்து
புள்ளும்படியான காகிதம்போல்
என்னையும் நிர்மூலமாக்கிவிட்டாயே கீலம்கீலமாக
கூட்டி எடுக்கமுடியாதபடி.
சனநொிசலுள் தெத்திக்கோடு விளையாடி
சும்புமிட்டாய் கேட்டழும்
ஏன் வெகுழிசுபாவத்தை தூபமிட்டு
நின் விரகமிருகத்தை
என்மீது கொதறிவிட்டாயே வெறியடங்கும்படியாக.
என் அலாதியான சிறகடிப்பை
துளித்துளியாய் குடித்த முதலாம் பிசாசே
படுக்கையில் கிடக்கும் தனித்த சூழலில்
நின் தாயை சகோதாியை
இன்னும் மகளை எப்படிப் பார்க்கின்றாய் ?
றகுமான் ஏ. ஜெமில், இலங்கை
riyasahame@yahoo.co.uk
- நால்வருடன் ஐவரானேன்
- பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்
- மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்
- புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்
- கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை
- மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்
- அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘
- தொகுதிப் பங்கிடு-ஒரு கற்பனை
- நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே!
- “ஹால் டிக்கெட்”
- தீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது
- உலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்
- வனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்
- பெரியாரும், சிறியாரும்
- நம்பமுடியாமல்…
- இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்
- யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்
- தேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்
- சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம் ஆங்கிலம்
- கடிதம்
- கடிதம் ஆங்கிலம்
- தமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)
- அறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி
- வேம்பு
- ஒரு மயானத்தின் மரணம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14
- தொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘
- புலம் பெயர் வாழ்வு (6)
- உயிரா வெறும் கறியா ?
- வாசிப்புக் கலாசாரம்
- சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்
- ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு ?
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- இறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)
- கீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கவிதை
- பெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அலறியின் கவிதைகள்
- முதலாம் பிசாசின் நடத்தை
- நினைவலையில் காற்றாலை
- வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்!
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)