This entry is in the series 20031120_Issue

நா. முத்துக்குமார்-விக்ரமாதித்யன் நம்பி


அற்புதம் அற்புதம்
பள்ளம்
பாய விழக்கொண்டு
பார்த்திருக்கிறாயா
யோனிமுடியை
அதன் பிரபஞ்சச்சுழிப்பை
வளர்ந்து
வரும் சிறுமுலையை
ரோம நதியை
(அதன்
ஆழங்களில்
அமிழ்ந்து
அடித்துச் சொல்லப்பட்டவர்களை)
மாதவிடாய்
என்றால் தெரியுமா
தெரியும்
தெரியும்
வழிகிறது
குருதி ஆறு
ஆசையில்
யாரை
நோக்கி
எப்படி
கண்டுபிடி
கண்டுபிடி
எந்த மரக்கிளையில்
இருந்து விழுந்தாய்

முதல் முதலிலே
இதைப் பார்த்து
பயந்தாயா பெண்ணே

ருதுவாகி
எத்தனை
வருஷங்கள் ராஜகுமாரி

உன் கனாவில்
யார் வருகிறான்

வருவான்
குதிரை ஏறி வருவான்

என்னை
சிறையெடுத்துச் செல்வான்

என்
முலைக்கதகதப்பில்/குளிர்ச்சியில்
தூங்குவான் அமைதியாய்

சற்றே மீறிப்போனால்
சங்கைக் கடித்து
ரத்தம் குடித்து
நானும்
செத்துப்போவேனடா
பித்துக்குளியே

***********************************

Series Navigation