மெளனம் பற்றி ஏறி

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

எஸ் ரமேஷ்


அறைகிறது என்னை

உன் வாதை

இறுக்க அறைந்த முகங்களுக்கிடையே

தவித்து அலையும் பட்டாம்பூச்சியை

நானறிவேன்…

நெருக்கிய கிராதிக் கம்பிகளூக்கிடையே

சோகையாய் விரிந்த நாய்குடைப்

புன்னகை கூடப்போதும்

என் இருட்குகை முழுதும் சுடர் மெழுக

ஒளி ததும்பச் செய்துகொள்வேன்.

***

subramesh@hotmail.com

Series Navigation

எஸ் ரமேஷ்

எஸ் ரமேஷ்