இன்னுமா மெளனம் ?

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

அபுல் கலாம் ஆசாத்


நீராக இருக்கின்ற நினைவுகளின் மேற்பரப்பை
நீ தொட்ட பொழுதெல்லாம் சிற்றலைகள்
நீ என்ன கல்லா ? தென்றலா ?

ஆறாத காயங்கள் ஆங்காங்கே என்னுள்ளே
ஆகிவிட்டதனால் அழுகின்றேன்
நீ என்ன விபத்தா ? போரா ?

நேராது இருந்திருந்தால் நிம்மதியும் நித்திரையும்
நேர்ந்து விட்டதனால் கண்விழிப்பு
நீ என்ன சத்தமா ? முத்தமா ?

கூறாது இருக்கத்தான் கோலமுற்றேன் ஊமையென
குருடாயும் ஆகிவிட்டேன் இப்போது
நீ என்ன இருளா ? கோலா ?

***
azad_ak@yahoo.com

Series Navigation

அபுல் கலாம் ஆசாத்

அபுல் கலாம் ஆசாத்