தலைவா

This entry is part [part not set] of 16 in the series 20010304_Issue

ஜெயானந்தன்


தலைவா,

எதைத் தேடுகின்றாய்

புதை, குழியில் புதை.

தீயிட்டுக்கொளுத்து

கொழுப்பு சாம்பலாகி

எலும்புகள் உருமாறி

கலசத்தில் ஏறும்வரை

அந்த ‘இடத்தை ‘ சாணமிட்டு மொழுகு

கல்வைத்து புனிதமாக்கு

மெளனத்தோடு இரண்டு சொட்டுக் கண்ணீர்(!)

வரும்போகும் பாதசாரிகளுக்கு.

உண்டியல் குலுக்கி காசு சேர்

எரித்தவனை தலைவனாக்கு

இனி

வரப்போகும் தலைவனுக்கு

குழிவேட்டு பக்கத்தில்.

Series Navigation

ஜெயானந்தன்

ஜெயானந்தன்