வெள்ளையடித்த கல்லறைகள்….

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

நாவாந்துறை டானியல்ஐீவா


என் அண்ணன் மகள் நீலாவுக்கு என் மீது விருப்பம் என்று சொல்வதிலும் பார்க்க என் சயிக்கிளில் ஏறித் திாிவதிலேயே விருப்பம் என்று சொல்லலாம் .அவ்வப் போது அவள் செய்யிற குழப்படியால் என்னிடம் அடியும் வாங்குவாள்.அடி வாங்கினாலும் சுனக்கட்டினவள் போல் என்னையே சுற்றித் திாிவாள். எப்படியும் காலையில் அவள் படிக்கும் பாடசாலைக்கு நான் எட்டு மணிக்கு முதல் ஏற்றிக் கொண்டு எட்டரைக்கு பள்ளிக்கூட வாசலில் விடவேண்டும் .மீண்டும் பதினொரு மணிக்கு அவளைக் கூப்பிடுவதற்காக போக வேண்டும். சயிக்கிளில் நடுபாாில் இருந்து என்னொட வரும் போதே ஏதேனும் என்னுடன் கதைத்துக் கொண்டே வருவாள்.நீலா எப்போதாவது என்னிடம் கேள் வியெழுப்புவாள்.சில கேள்விகளைக் கேட்டபின் அவளின் புத்திக் கூர்மையைக் கண்டு வியந்து போய் விடுவேன்.

வீட்டில் இரவில் துாங்கும் போதும் நான்தான் பக்கத்தில் துாங்க வேண்டும்.அவள் எனக்குப் பக்கத்தில் துாங்கும் போது சித்தாப்பா ஒரு கதை சொல்லுங்க என்று கேட்டாள் நான் கதைக்கு பதில் அவளுடைய குறும்புச் செயலை வேறொரு பாத்திரமாக சித்தாித்து கதையை விடுவேன3 நான் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் கதையின் போக்கை கவனித்துக்கொண்டிருந்து விட்டு இடையிலே சொல்லுவாள்ளூ ” இந்தக் கதை என்னைப் பற்றித்தான்”என்று சொல்லி விடுவாள்.

”என்னெண்டு உன்ர கதையெண்டு நீ கண்டு பிடிச்சனி” என்று நீலாவிடம் கேட்டாள் அவள் சொல்லுவாள்: ”சித்தப்பா நீங்கள் கதையைச் சொல்லேக்கில்லையே ஒரு ஊரில ஒரு ராசாவுக்கும் ராணிக்கும் இரண்டு குழந்தைகளாம். ஒரு ஆணும் மற்றது பெண்ணுமாம். ராசாவினுடைய மகள் எந்த நேரமும் அவரட சித்தப்பாவோடுதான் சைக்கிளில்ல திரிவாவாம். எந்த நேரமும் அவங்கட அண்ணாவோட சண்டை பிடிப்பாவாம் என்று நீங்கள் சொல்லேக்கிலேயே எனக்கு விளங்கிடும்.” என்று நீலா சொல்லுவாள்.

அவள் காலையில் எழுந்து விட்டாள் என்றால், பாடசாலைக்கு போறதுக்கு துாய வெள்ளைச் சட்டையை போட்டுக்கொண்டே வீட்டில் நடமாடுவாள். எனக்கு எப்போதும் காலை வெயில் உடம்பில் படும் வரை துாங்குவதென்றால் பிடிச்ச விசயம். அம்மா விடிகாலையில் துாங்குவதைக் கண்டால் ”மோன எழும்படா” என்று சொல்லுவா. நான் உடுத்திக் கொண்டு படுத்திருக்கும் சாரத்தால் மேலும் தலைமுட்ட இழுத்து போத்திக் கொண்டு திரும்பிப் படுத்திருவேன். நீலா என்னை எழுப்ப வந்தாள் என்றால் அவளுடைய அரியுண்டம் தாங்க முடியாமல் எழும்பி விடுவேன். எப்பவும் எனக்குப் பக்கத்தில் துாங்குகிறவள் நேற்றிறவு என்னோடு துாங்காமல் தங்களுடைய அம்மாவோடு துாங்கி விட்டாள். நேற்று பகல் அவளை பள்ளிக் கூடத்திற்கு போய் சைகிளில் ஏற்றுவதற்காக காத்துக்கொண்டிருத போது நீலாவிற்கு படிப்பிக்கும் ரீச்சர் எதேச்சையாக என்னைச் சந்திக்க நேர்ந்தபோது நான் அந்த ரீச்சரோடு கதைத்துக் கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் தான் நீலா பள்ளி முடிந்து என்னைத் தேடி ஓடி வந்தாள். நான் கதைத்துக்கொண்டு நின்றதை என் அண்ணனிடம் சொண்டு மூட்டிக் கொடுத்திட்டாள். அண்ணன் நேற்று சாய்ந்தரமே என்னட்ட இந்த விடயம் பற்றி கேட்கும் போது நீலா சிரித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினவள். நான் அடிச்சுப் போட்டிடுவன் என்ற காரணத்தாலோ எனக்குப் பக்கத்தில் துாங்க வரவில்லை. அதனால் எந்த அரியண்டமும் இல்லாமல் நேரத்தோடு நேற்று துாங்கி விட்டேன். எப்படி இருந்தாலும் காலையில என்னை எழுப்பி ஆக வேண்டிய கட்டாய நிலை நீலாவிற்கு. நசுக்கிடாமல் பக்கத்தில் வந்து நீலா உக்காந்து கொண்டு ”சித்தப்பா… சித்தப்பா… பள்ளிக் கூடத்திற்கு நேரம் போய்ற்று எழும்புங்கோ….”என்று சொல்லிக் கொண்டு தனது வலது கையால் என்னுடைய உடம்பை அசைத்தாள். துாக்க அசதி விழிகளில் அப்படியே விலகாது இருந்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன். எழுந்த கையோடு வந்த விசருக்கு அவளுக்கு செவிடுபறிய குடுக்க வேண்டும் போல் இருந்த கோபத்தை அடக்கிக்கொண்டு

”ஏன்ரீ உங்கட அப்பாக்கிட்ட அண்டிக் குடுத்தனி..” என்று நான் கேட்க…

”சொல்லித்தான் குடுப்பேன்… நீங்க என்ன சைக்கிளில் ஏத்திக்கொண்டு பள்ளிக் கூடத்தில இறக்கேக்கையும் பள்ளிக்கூடம் முடியும்போதும் ஒரு ரீச்சரோ மட்டும் நெடுக நெடுக நீங்கள் கதைக்கிறியள். அந்த ரீச்சர் எனக்கு அடிக்கிற ரீச்சர் என்று தெரியாதோ… ? ‘

”உனக்கு அந்த ரீச்சர் அடிக்கிறது என்றால் நான் கதைக்கக் கூடாது என்று உன்ர சட்டமோ… ? நேற்றுப் பின்னேரமே உங்கட அப்பா என்னட்ட ரீச்சரோட கதைச்சதைப் பற்றி கேட்டவர்…”. அண்ணன் வேறு அர்த்தத்தோடு கேட்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டு நீலாவின்ர காதை என்னுடைய கையால் பிடிச்சு திருகினேன். நீலா கத்திக்கொண்டு அண்ணனைத் தேடி ஓடினாள். நான் எழும்பி பல்லைத் தீட்டிய படி குளிக்க கிணத்தடிக்குப் போனேன்.

நான் குளிச்சிட்டு வெளிக்கிட்டுக் கொண்டு அறையை விட்டு வரவும் நீலா புத்தகப் பையை கையிலே மாட்டிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. நீலா வெளிவாசலில் நில்லு நான் ஒன்றுக்கு இருந்துட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வாறன். என்று சொல்லிக் கொண்டு கிணற்றடிப் பக்கமாக இருக்கும் மலசல கூடத்தை நோக்கிப் போனேன். நீலா வீட்டை விட்டு இறங்கி எனக்காக காத்துக்கொண்டு நின்றாள். அண்ணன் இன்னும் வேலைக்குப் போகவில்லைப் போல. அண்ணனின் சத்தம் அறையில் இருந்து எனக்குக் கேட்டது. ஒன்னுக்கு இருந்து விட்டு சைக்கிளை எடுப்பதற்காக முன் விறாந்தையில் சுவரோடு சாத்தியிருந்த சைக்கிள் பக்கமாக வந்தேன். சைக்கிளின் முன் சில்லைப் பார்த்ததும் ஒரு கணம் இடிந்து போய்ற்றேன். சைக்கிளின் முன் சில்லில் காற்றுப் போய் றிம்மில் நின்றது. வீட்டு வெளிவாசல் அடியில் நின்ற நீலா

”சித்தப்பா பள்ளிக்கு நேரம் போற்று கெதியாக வாங்கோ…” என்று என்னைக் கூப்பிட்டாள்.

”நில்லடி நீலா நான் வாறன் ‘ என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை உருட்டிக் கொண்டு வாசல் பக்கமாகப் போனேன். சைக்கிளைப் பார்த்ததும் நீலா விக்கித்துப் போனாள். எனக்கு அவளைப் பார்த்ததும் ஒரு பொய்க் கோபம் வந்தது. அவளை வெருட்டுவதற்காக

”காத்தால இரண்டு முறை நீ வந்து என்னைச் சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டு திரியும் போதே நினைச்சிட்டன் நீ சைக்கிளுக்கு ஏதும் செய்து போட்டாய் என்று. இப்ப ஏதோ தெரியாத மாதிரி நடிக்கிற….

நீயாடி காற்றுத் திறந்து விட்டனீ ?” ஒரு அதட்டலாய் என் வார்த்தை சீறிப்பாய…

”என்ர அம்மாவான… என்ர பரலோக மாதவறிய… இல்ல சித்தப்பா எனக்குத் தெரியாது! இப்பத்தான் உங்கட சைக்கிளைப் பாத்தனான். எனக்கென்ன கோபம் உங்களில சித்தப்பா ?”

”என்ன கோபமா ரீச்சரோட கதைக்கிறன் என்று அண்ணன் கிட்ட நேற்று போட்டுக் கொடுத்தியல்ல….”

”அது ரீச்சரில இருந்த கோபம் சித்தப்பா. இப்ப பள்ளிக்கு நேரம் போய்ற்று வாங்க சித்தப்பா போவம்.”

வீட்டுக்குள்ளே இருந்து வெளி வாசலுக்கு ஓடி வந்த அம்மாளூ ”மோன கவனம் ஆமிக்காரன், பொடியல் …. சுறுக்கா வந்திரு மோன…”

”ஓமன….” அம்மா என்று சொன்னேன்.

அம்மா வீட்டுக்குள் போக நீலாவைப் பார்த்துக் கொண்டு ”சரி சரி வா எல்லாத்துக்கும் உன்னைக் கவனிக்கிறன். இப்ப போய் சையிக்கிளுக்கு காத்தடிக்க ஜந்து ரூபா சித்தப்பா தரட்டாம் என்டு சொல்லி உங்கட அப்பாக்கிட்ட வாங்கிற்று வா”. அவள் காதில் விழுத்திய கையோடு வீட்டிற்குள் ஓடினாள்.

”துர்ராசாவின்ர கடையில காத்தடிக்க இருபத்தைஞ்சம் தானே வரும் அதுக்கேன் இவன் ஐஞ்சு ரூபா கேட்கிறான்.என்ன புள்ளய கூட்டிக் கொண்டு போறதுக்கு சம்பளமோ… ?”

நீலா நான் சொல்லி விட்டதை கேட்டிருப்பாள் போல….அண்ணனின் குரல் வெளியில் நின்ற எனக்கு காதில் விழுந்து வெடித்துச் சிதறியது அந்த வார்த்தை.எனக்கு என்ன பதில் சொல்வதென்று தொியாமல் முழிச்சுக் கொண்டு நின்ஆறன3ஒரு கணம்தான் அந்த அச்சம் படர்ந்த உறைநிலை.திடிரென பொறி மின்னலாய்

”நீலா….!நோர்வேச் சித்தப்பா காசனுப்பின பிறகு அந்த ஐஞ்சு ரூபாயும் தாறனென்டு சொல்லு….” என்று அண்ணனின் காதில் பலமாக விழக்கூடிய மாதிாி கத்தினேன்.

”வேல வட்டியில்லாமல் திாியிறான் என்ற உணர்வும் கிடையாது….குடும்பப் பொறுப்பும் கிடையாமல்

தெருவில திாியிறாான்….ஆனா கோபம் மட்டும் சுறுக்கென்டு மூக்கு முட்ட வந்திரும்…ஐஞ்சு ரூபாய்க் காசுக்கு நோர்வேயில இருக்கிற தம்பியைச் சாட்டுற வடிவப்பார்…இந்தாடி நீலா இந்த ஐஞ்சு ரூபாயையும் அவனட்ட குடடடி..”

என் முகத்தில் அறைஞ்ச மாதிாி இருந்தது.என்ன செய்யிறது உழைப்பு பிழைப்பு இல்லாமல் வீட்டில ஓசியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டுதானே போகவேண்டும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.நீலா காசை வாங்கிக் கொண்டு என்னைத் தேடி வெளியில் வந்தாள்.நானும் அவளுமாக சயிக்கிளை உறுட்டிக் கொண்டு கடைக்கு வந்து சேர்ந்தோம்.காத்தை அடிச்சு போட்டு ஐஞ்சு ரூபாயை துர்ராசா அண்ணனிடம் குடுக்க அவர் தன்னட்ட சில்லறை யில்லையென்று சொல்லி திரும்ப வரும் போது காசைத் தரச்சொன்னார்.இனியெங்க அவருக்கு குடுக்கிறது….இருபத்தஞ்சம் லாபம் எண்டு மனசுக்குள் நினைச்சுக் கொண்டு ஐஞ்சு ரூபாயையும் பையில் வைத்துவிட்டுளூநீலாவை சயிக்கிளின் நடுபாறில் குறுக்ககா இருத்தி விட்டு சயிக்கிளை மிதித்தேன்.

இப்போ சயிக்கிள் நாலு சந்தியைத் தாண்டி சோனகதெருவால் போய்க் கொண்டிருந்தது.ஐஞ்சு சந்தியால் திரும்பி ”பிளவுஸ்” தேத்தண்ணீக் கடையை தாண்டும் போது வீதியோரத்தில் பொடியல் துவக்கொடு நின்றார்கள். ஓரு கணம் உயிர் உறைந்தது.ஜஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு விழுந்தவன் போல் உடலின் யாசிப்பு.மழையில் நனைந்த கோழி போல் கூனிக் குறுகி நடுங்கினேன்.

”இண்டைக்கு என்ன இளவோ…!ஆற்ற கண்ணில முழிச்சேனோ தொியாது…எல்லாம் துக்கறியாத்தான் கிடக்கு…” நேற்றும் இப்படித்தான் சந்தியில நிண்டு போற வாற பொடியல புடிச்சவங்களெண்டு எங்கட வீட்டில கதைச்சவங்க எப்படித்தான் இருந்தாலும் நீலாவுக்கு நல்ல பயிற்சி ஏற்கனவே கொடுத்திட்ட சந்தோசம் என்ர மனசின் ஒரத்திலிருந்து விழித்துக் கொண்டது.நீலா கெட்டிக்காாி அப்படி யெதும் தட்டுத் தவறி நடந்து விட்டாள் அவள் அழுது குளறி ஊரையே கூட்டி என்னைக் காப்பாற்றி விடுவாள் எண்டு மனதளவில் நினைத்தாலும் நலிந்த நம்பிக்கையோடு சயிக்கிளை மெதுவாக ஓட்டினேன்.

என்னவோ தொியல அவங்க என்னக் கண்டு கொள்ள வேயில்ல.மூன்றாம் நாள் உயித்தெழுந்த யேசுவைப் போல் புதுப் பிறப்பெடுத்தேன்.ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டு சீனியின்ர கடையைத் தாண்டி கச்சான் கடைச் சந்தியால் இடப்பக்கமாக சயிக்கிளை திருப்பி வைத்தீஸ்வராக் கல்லுாி வழியாக நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.பொடியலின்ர பயத்தில நீலாவிடம் சொல்ல நினைத்த காாியம் மறந்து போய் நீலாவின் முகத்தை பார்க்க நீலா என்னை திரும்பி பார்த்தாள்.

”என்ன சித்தப்பா!இயக்க பொடியல கண்டுட்டு பயந்து போயீட்டேங்களா.. ?அதுக்குத்தானே உங்கட ஜடியா உடன எனக்கு வந்திருமே….என்ர அப்பாவை விடுங்க….விடுங்க…எண்டு கத்திக் குளறுவேனே…”

”எனக்கு ஏதும் நடந்தால் ஊரேயே கூப்பிடுவியெண்டு தொியும்தான்…. அதை விடு நீலா அந்த ாீச்சாின்ர கதைக்கு வாறன்.ாீச்சாிரை எனக்கு எப்பிடி தொியுமெண்டு உனக்கு சொல்லுறன் இதுக்கு புறவாவது வீட்டில வந்து அண்டிக் கொடுக்கக் கூடாது….என்ன… ?”

”ம்…சித்தப்பா….நீங்க இரவில கதை சொல்லுறனென்டு என்னப் பத்தி சொல்ற மாதிாியென்ட எனக்குச் சொல்ல வேண்டும்….”

”இல்லை இது உண்மையாய் நடந்ததை ஒளிவு மறைவில்லாமல் சொல்லுறன்”

”ஆரு சித்தப்பா…அப்பாவையும் தங்கச்சியையும் இந்தியன் ஆமிக்காரன் சுட்டதென்டு நீங்க என்ன பள்ளிக்கூடம் முடிய உரும்பிராய்க்கு கூட்டிக் கொண்டு போனேங்களே அந்தச் சினேகப் பொடியனைப் பற்றிய கதையாங்க… ?

இல்ல..இது முல்லைத் தீவைப் பிறப்பிடமாக கொண்ட என்ர சினேகிதப் பொடியன் பற்றிய கதை. அவனும் நானும் ஒ. எல் ஒன்றாக ாீயூசன் சென்ரலில படித்த போது பழக்கமானவன்.நல்ல பொடியன் சோதனை எடுத்து முடிஞ்சாப் பிறகு நான் வீட்டோட இருந்து விட்டேன்.பாீட்சை முடிவைப் பார்த்து மேற்கொண்டு ஏதாவது செய்யலாமெண்ட நோக்கத்தோடு. ஆனா இனியன் அப்பவே அவங் கட ஊர்ப்புள்ளய விரும்பித் திாிஞ்சவன்.சோதினை எடுத்து முடிய அந்த பொட்டையை கூட்டிக் கொண்டு ஓடி திரும்ப கிறிஸ்தவ முறைப்படி கோயிலில அடுத்தாருக்கு முன்னாலே வைச்சு சுவாமி கைப்பிடிச்சு விட்டவர். இனியனுக்கு அதுக்கு பிறகு செல்வி, மாறன் என்று இரண்டு குழந்தைகள் பிறந்தது.மீன்பிடித்தொழிலுக்கு போய் வந்த இனியனுக்கு திடாரென வெளிநாட்டிற்கு போக வேண்டும் என்ற ஆசை வந்தது.அதை நான் பிழையென்று நினைக்கெல அவனுடைய நிலையிலுள்ள எல்லா இளைஞர்களுக்கும் வருகின்ற ஆசைதான்.வீட்டிலிருந்த நகைளையும் காணியையும் விற்றும் பணம் பத்தமால் சொந்தக் காரர்களிடம் கடனாய் பணம் வாங்கிக் கொண்டு கனடா போய்ச் சேர்ந்தான். உழைத்து கடனளித்து ஊாில் வீடும் கட்டிக் கொடுத்தான்.ஆனால் ஆசைப்பட்ட அவன் மனைவி பிள்ளைகளை எடுக்க முடியாத நிலை.அகதிமனு அவனுக்கு நிராகாிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில்தான் இனியனின் அந்தோனி என்ற நண்பன் அவன் குடும்பத்துக்கு உதவி செய்யத் தொடங்கி கடசியில் இனியனின் மனைவிக்கும் அந்தோனிக்கும் நெருக்கமான உறவு எற்ப்பட்டு கல்யாணத்தில் முடிந்தது.அந்தக் குழந்தை இரண்டையும் அன்பில்லாமல் தன்னுடைய வேலைக் காரர்களைப் போல நடத்தி வந்தாள். இந்த சம்பங்களை யெல்லாம் கனடாவிலிருந்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாமல் வெளிநாட்டு வாழ்கையே வேணாமென்டு ஊர் திரும்பி விட்டான். இனியன் நடந்த சம்பவமெல்லாத்தையும் ஒன்றும் மறைக்காமல் என்னிடம் ஒப்புவித்தான். யுாரை எனக்கு குற்றம் சொல்வதென்று எனக்கு புாியவில்லை…. ஒருவேளை நீயும் என்னுடைய வயதை ஒத்தவளாக இப்போது இருந்தால் உனக்குள் ஒரளவு விளங்கிக் கொண்டிருப்பாய்.நான் இந்தப் பிரச்சினையை விளங்கிக் கொண்டளவுக்கு உனக்கு சொன்னாலும் நீ கேட்கக்கூடிய பக்குவ நிலையிருப்பதாக எனக்குத் தொியவில்லை.இங்க வந்தவுடன் அவனுடைய மனைவியிடம் பிள்ளைகள் இரண்டையையும் கேட்ட போது அவள் எந்த மறுப்பும் தொிவிக்காமல் இனியனிடம் கொடுத்து விட்டாள். அவனுடைய இரண்டு பிள்ளைகளையும் கொணடு வந்து நீ படிக்கிற பாடசாலையில சேர்த்து அங்கேயே தங்கவும் ஏற்ப்பாடு செய்துவிட்டான். அவங்கட ஊாாிலயிருந்து யாழ்ப்பாணம் வந்தால் என்னோடுதான் திாிவான்.பிள்ளைகளை பார்க்கப் போகும் போது நானும் அவன் கூடவே உங்கட பள்ளிக்கூடத்தில இருக்கிற கொஸ்டலுக்கு போறனான்.அப்படிப் போய் வருகிற போதுதான் உங்கட ாீச்சரையும் தொிய வேண்டி வந்தது.எப்ப உங்கட ாீச்சர் என்னைக் கண்டலும் இனியனின் பிள்ளைகள் பற்றித்தான் கதைப்ப….அதைவிட எந்தக் கதையும் வைத்துக் கொள்வதில்லை.இப்ப விளங்கிற்ற நீலா.. ?”

”ஓம்….சித்தப்பா!பாவமென்ன அந்தப் புள்ளயல்….அவங்கட அம்மா அவங்களை பார்க் கிறதில்லையா ?”

”இல்ல நீலா….அவங்கட அம்மா இனியனின் நண்பனைக் கல்யாணம் செய்த பிறகு தன்ர சொந்தப் பிள்ளைகளையை வெறுத்துப் போட்டா….”

”ஏன் சித்தப்பா… ?”

”தொியல….ஒரு வேளை நான் நினைக்கிறேன் தன்னுடைய இரண்டு பிள்ளைகளை விட அவ ஏதோ இனியனின் நண்பனட்ட கண்டுபிடிச்சிருக்கிற போல….”

”உம்”

”என்ன நீலா உம் போடுறாய். ?”

”இல்ல சித்தப்பா உங்கட நண்பற்ற கதையை கேட்க அழுகைதான் வருகுது…”

”நீலா உனக்கு அழுகை வருவுதோ என்னவோ எனிமேல் உங்களின்ர ாீச்சரரோடு கதைக்கிறதை மட்டும் வீட்டில போய் சொண்டுரஞ்சக் கூடாது… என்ன ?”

”ஓம் சித்தப்பா எனிமேல் அந்தக் கதையை கதைக்கவே மாட்டேன்”.என்றாள் நீலா

என்னுடைய சயிக்கிள் இப்போது ஆஸ்ப்பத்திாி வீதி வழியல் சென்று இடப்பக்கமாக சென்றது.நீலா என்ன காரணமோ தொியவில்லை ஒன்றும் பேசாமல் சயிக்கிளில் இருந்தாள். சுில வேளை நான் எாிஞ்சு விழுவன் என்ற நினைப்பிலோ அல்லது இனியனின் கதையைக் கேட்ட பிறகோ அப்படி அமைதிச் சூழலில் இருந்த அவளிடம் பள்ளிக் கூடம் கிட்டவர சயிக்கிளின் ஒட்டத்தின் வேகத்தை குறைத்துக் கொண்டு நானே கதையைத் தொடங்கினேன்….

”நீலா!இந்த நத்தாருக்கு என்ன வாங்கித்தர…. ?”

”சித்தப்பா நீங்க இப்படித்தான் நெடு நெடுக கேப்பீங்க ஆனா வாங்கித் தரமாட்டிங்க நீங்க கஞ்சல்….”

”நானே உங்கட அப்பம்மா கைச்செலவுக்கு தாற காசிலதான் என்ர காலமே போகுது….உனக்கு வாங்கித்தர ஆசையாக இருந்தாலும் கையில காசு இருக்கவேணுமே”

சயிக்கிள் பள்ளிக்கூடத்தின் வாசலடிக்கு வந்து விட்டது.சயிக்கிளிலிருந்து நீலாவை என்னுடைய முழுப்பலத்தையும் வைத்து கைத்தாங்கலாய் துாக்கி கீழே இறக்கி விட்டேன்.அவள் எனக்கு போய்ற்று வாறேன் என்று சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடத்தை நோக்கி ஒடவும் இனியனின் இரு பிள்ளைகளும் எனக்கு பக்கம் ஒடிவரவும் சாியாக இருந்தது.

”மாமா எங்கட அப்பாவைக் கண்டியல…. ?”

என்று இனியனின் மூத்த மகன் வாஞ்சையோடு என்னிடம் கேட்ட போது முகம் வாடி கண்கள் உள்ளொடுங்கி வறுமையின் சுவடு இழைந்திருந்தது.ஒற்றை வார்த்தையில் பதிலைச் சொல்லி விட்டு நகர என்னால் முடியவில்லை.நான் வளர்ந்த விதம் அப்படி.என் கண்களில் மேகத்திரள்.நெஞ்சில் இனியனின் நினைவு சட்டென மின்னியது.

ஒரு மாதத்திற்கு முதல் இனியன் மறுமணம் செய்து கொண்டு யாழ்ப்பாணம் வந்த போது தான் புதிதாக மணம் முடித்த விடயத்தையும் தன் மனைவியையும் அறிமுகம் செய்ததோடு கல்யாணி கிறீம் கவுஸ்சுக்கு கூட்டிக் கொண்டு போய் ஐஸ்கிறீமும் வாங்கித் தந்தான்.அதன் பின்னாடி ஒரு வாரத்திற்கு முதல் என்னைச் சந்திக்க வீட்டிற்கு வந்த போது தானும் தன் மனைவியும் இந்தியாவிற்கு அகதியாக போறதுக்கு படகுக்கு ஒழுங்குபடுத்தும்படி கேட்டான்.நான் பாசையூருக்கு இனியனையும் கூட்டிக் கொண்டு போய் இந்தியாவுக்கு அகதிகளை ஏற்றிக்கொண்டு செல்கிற போட்டுக்காரரை தேடிப்பிடிச்சு இனியனுக்கு அறிமுகப்படுத்தியும் விட்டேன்.அன்றிரவே பொழுதும் சாயும்வேளை கூட்டிக் கொண்டு போவதாகவும் தன்னுடைய வீட்டுக்கே வரும்படி போட்டுக்கார சம்மாட்டியார் சொன்னார். பொழுது சாயும் முன்னமே நான் ஒரு சயிக்கிளிலும் இனியனும் அவன் மனைவியும் ஒரு சயிக்கிளிலுமாக பாசையூருக்கு புறப்பட்டோம்.வரும் வழியிலேயே ாீசனில் படித்த காலத்தில் திாிந்த இடங்களையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு வந்தான்.பழைய நினைவுகளில் மூழ்குவது எனக்கு அலாதியாய் இருந்தது.

சம்மாட்டியின் வீட்டிற்கு போகும் வழியிலே பாசையூர் அந்தோனியார் கோயில் இருந்ததால் இனியனும் மனைவியும் கோயிலுக்குள் போய் மன்றாடிப் போட்டு மெழுகுதிாியை கொழுத்திப் போட்டு வெளியில் வந்தார்கள்.நான் கோயிலுக்குள் போகவில்லை.நான் ஒரு இடதுசாாிப் போக்குள்ளவன் என்பது இனியனுக்கு தொியுமென்பதால் அவன் என்னை வற்ப்புறுத்தவில்லை.

சம்மாட்டி வீட்டிற்கு சென்று அங்கிருந்து கடற்கரைக்கு போய்ச் சேர்ந்தோம். இந்தியாவிற்கு படகில் அனுப்பிவைத்துவிட்டு கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்று விட்டு வீடு திரும்பினேன். ஏன்பாட்டிற்கு யோசனையில் மிதந்த போது பள்ளிக்கூட பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு போன மினிவானொன்று எழுப்பிய ஒலிச்சத்தத்தில் நினைவுடைந்து என் பக்கம் நின்ற இனியனின் பிள்ளைகளைப் பார்த்தேன்.என்னைப் பார்த்தபடி சிலையாய் நின்றார்கள்.ஏனக்குள் கருக்கொண்ட துயர இருள்….துயரமா… ?அது சொல்லி மாளாத துயரம். இயேசுவை சிலுவையில் ஆணியால் அறைந்து போல்.

daniel.jeeva@rogers.com

Series Navigation

நாவாந்துறைடானியல்ஐீவா

நாவாந்துறைடானியல்ஐீவா