முக்காலடி
Published June 30, 2005 • By
ரஜத்
ரஜத்

எறும்பூர
கல்லும் தேயும்
நான்
அரும்பூர
தேய்ந்து போனேன்
நான்
சலனமற்ற நீர்
உன் சொற்கல் விழுந்தால்
வட்டம் வட்டமாய்
விரிவேன்
முப்பது நாட்கள்
பொறுத்தால்
நொருங்கிப் போவேன்
நீ முழு நிலா அல்ல
அதிகாலைச் சூரியன்
உன்
புன்னகையைப் பிடித்த
புகைப் படங்கள்
அத்தனையும்
பூக்கள்
ஊடல் வகிடு
கூடல் பின்னல்
குறள் பேசும் கூந்தல்
முதலடி நீ
முக்காலடி நான்
rajid_ahamed@yahoo.com.sg