This entry is in the series 20010623_Issue


புழுங்கலரிசி –1ஆழாக்கு

பயற்றம்பருப்பு –1/4ஆழாக்கு

உப்பு –1ஸ்பூன்

வெந்தயம் –1ஸ்பூன்

புழுங்கலரிசி, பருப்பு, வெந்தயம் இவற்றைச் சுமார் 2 மணி நேரம் ஊறவைத்து, களைந்துகொண்டு நறநறப்பாய் அரைத்து, வேண்டிய அளவு ஜலம் விட்டு, உப்புப் போட்டு கரைத்து வைக்கவும். புளிப்பிற்காக ஒரு கரண்டி மோர் விட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு தோசையாக வார்த்து எடுக்கவும். இந்த தோசையை அரைத்த அன்றே வார்த்துவிடுதல் நல்லது.

Series Navigation