சாலையோரம்

This entry is part [part not set] of 10 in the series 20001203_Issue


டி பிரியா


பிசாசு எழுதிய கவிதையாய்
தலைவிரித்து இலைகளின்றி மரம்.
கருத்த இருள் கவிய
இருக்கும் ஒளியும் பயமாய் ஒதுங்கும்.
தூரத்து மலைகளில் மினுக்கும் வீடுகளில்
பேய்களோ வசிக்கும் ?

வராத பஸ்.
காத்திருக்கும் நான்.

அருகிலே என்நண்பன்
ஒண் டூ திரீ
ஃபோர் பை சிக்கனா
உங்கப்பா எங்கப்பா
எருமக்கடா

தொந்தரவு செய்யும்
நண்பனில்லாத வாழ்க்கை நரகம்

Series Navigation