- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)
- கீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- முற்றும் இழத்தல்
- இப்போதாவது புரிகிறதா
- கவிதைகள்
- விண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]
- நான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்
- மெட்டாபிக்சனின் ஆழ அகலங்கள்
- தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள்
- Looking for Comedy in the Muslim World – திரைப்படம்
- புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு
- நீங்க எப்படிங்க ? கொஞ்சம் சொல்லுங்க
- ஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து
- கடிதம்- ஆங்கிலம்
- கடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- பெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- மனிதம்
- ப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )
- விடுமுறையின் முதல் நாள்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8
- ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து….!
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!
- எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…
- தர்கா பண்பாட்டு அரசியல்
- குருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்
- இளந்தலைமுறைக்குத் தலை வணக்கம்
- பாலாற்றில் இனி கானல் நீர்தானா ?
- மண்டைக்காடும் இந்து எழுச்சியும்
- சொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…
- அய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

காரிருள் சூழ்ந்தது இரவு
நேரத்தில்,
காரியம் யாவும் முடிந்தன!
கடைசி விருந்தினர் நுழைந்த பின்
வீட்டுக் கதவுகள் மூடப் பட்டன!
வேந்தன் வரக் கூடும் என்று
நினைவு படுத்தினர் சிலர்!
வெடித்துச் சிரித்தோம்,
நொடியில் வர மாட்டான் என்று!
ஆயினும்
கதவைத் தட்டும் அரவம் கேட்டு,
‘தூதன் வந்துள்ளான், ‘ என்று
காதினில் உரைத்தனர்.
காற்றா யிருக்கு மென்று
வாளா விருந்தோம்!
விளக்கை அணைத்து விட்டு
படுக்கையில் விழுந்தோம்!
நள்ளிராப் பொழுதில் கேட்டது
திடுக்கிடும் சத்தம்!
தூரத்தில் முழக்கும் இடியெனக் கருதி
தூக்க மயக்கத்தில்
வெளியே
நோக்கா திருந்தோம்!
புவித்தளம் அதிர்ந்தது!
சுவர்கள் ஆடின!
தூக்கம் கலைந்து
போனது!
தேர்ச் சக்கரத்தின்
ஆரவார மென்று கூறினர் சிலர்!
இல்லை யென மறுத்தோம்!
முழக்குவது இடிதான் என்று
முணுமுணுத்தோம்
உறக்கத்தை விடாமல்!
காரிருளில் மூழ்கிக் கிடக்கு மிரவு,
போர்முரசும் அடிக்கும் போது!
குரல் கிளம்பியது அக்கணம்:
‘அதோ! பார் வேந்தரின் கொடியை!
எழுந்திரு! தாமதம் வேண்டாம்! ‘ என்று.
நெஞ்சம் துடித்தது! கை பதறி
அஞ்சி நின்றோம்!
தாமதி யோமினி! காத்திருப் போமினி!
மாமன்னர் வருகிறார்! அந்தோ!
விளக் கெங்கே வீட்டில் ?
பூமாலை எங்கே சூடுவதற்கு ?
ஆசனம் எங்கே அமர்வதற்கு ?
தோரணத்தில் அலங்கரித்த
மாளிகை எங்கே ? வெகுண்டனர் சிலர்:
வெட்கக் கேடாய்ப் போச்சு!
வேளை தவறி விட்டது!
வெறுங் கையுடன் வரவேற்போம்!
வீட்டு அறைக்குள் வேந்தரைக்
கூட்டி வாரீர்!
கதவைத் திறந்து வைப்பீர்!
ஆலய மணியின் ஓசை எழட்டும்!
நம் காரிருள் மன்னன்
நள்ளிராப் பொழுதில்
நமது பாழான வீட்டின்
வாசலில் நுழைகிறார்!
வானில் அப்போது இடி முழக்கும்!
பட்டென இருட்டில்
மின்னல் வெட்டும்!
முனையில் கிழிந்து தொங்கும்
உனது துண்டுப் பாயை
உதறி
முற்றத்தில் விரித்து வை!
புயலைப் போர்த்தி,
திடுமென நமது வேந்தன்
இச்சையுடன் வருகிறான்,
அச்சமுள்ள இரவில்!
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (February 6, 2006)]