கணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்

This entry is part [part not set] of 10 in the series 20000702_Issue

5. இணையத்தின் மூலம் பிற வலைத்தளங்களைத் தகர்ப்பது எப்படி ? நீங்கள் இணையத்தின் மூலம் வங்கிகளில் இருந்து பிறன் பணத்தை உங்களது கணக்க


பத்திரிக்கைச்செய்தி

‘நியுசிலாந்தைச்சார்ந்த ஒரு குழு இந்திய அணுசக்தி துறையின் கணினியிலிருந்து (Data) தரவுகளை அழித்ததாக அறிவித்தனர் ‘

இந்தியாவின் அணுஆயுத சோதனை பற்றிய தகவல் அடங்கிய கணினியில் நுழைந்ததாக பா¢கிஸ்தானிய Hacker அறிவிப்பு…

அமெரிக்காவின் நாசா கணினியில் இருந்து அதிநவீன ஏவுகணைபற்றிய இரகசியங்கள் திருட்டு, இஸ்ரேலைச்சேர்ந்த கணினி வல்லுனர் கைது….

இணையத்தின் மூலம் கோடிக்கணக்கில் வங்கியிலிருந்து பணம் கொள்ளை – வங்கி ஊழியர் கைதுசெய்யப்பட்டு விசாரணை..

போன்ற செய்திகளை நாம் நாளேடுகளில் படிக்கமுடியும். எவ்வாறு இது சாத்தியப்படுகிறது ? இந்த அளவுக்கா இணையத்தில் தரவுகளுக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டது ? எப்படி ஒரு வலைத்தளத்திற்குள் அனுமதியில்லாமல் நுழையமுடியும் ? போன்ற கேள்விகள் உங்களுக்குள் ஏற்படலாம்… இவற்றை பற்றி அறிந்து கொள்ள தங்களுக்கு குறைந்தபட்சம் கணினியில் எவ்வாறு கோப்புகள் கையாளப்படுகின்றன என்பதாவது தெளிவாகத்தெரிந்து இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றாலும், குறைந்த பட்சம் தெரிந்துகொண்டு வாய்விட்டு படியுங்கள் நீங்களும் புரிந்துகொள்வீர்கள்.

முதலில் ஒருவலைத்தளம் எவ்வாறு அமைக்கப்படுகிறது என்று பார்ப்போம்

பொதுவாகவே நம்மில் பலர் தனிக்கணினிகளை(personal computer) உபயோகித்து வருகிறோம். தனிக்கணினியில் கோப்புகளையோ,தொகுப்புகளையோ(Directory) பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. ஒரு தனிக்கணினியில் ஒருவர் கணினி பற்றிய அறிவுடையோரோ அல்லாது அது பற்றி அறியாதவரோ, எளிதாக கோப்புகளையும் தொகுப்புகளையும் அழித்து விட முடியும். ஆனால் அதுவே ஒரு வலையமைப்பாக இருந்தால் அதில் தரவுகளுக்கு பாதுகாப்பு மிகமிக அதிகம், யார் யார் எந்த கணினியின் எந்தப்பகுதிக்குள் நுலையலாம், யார் யார் எந்ததெந்த கோப்புகளை, தொகுப்புகளைப் பார்வையிடலாம் அவருக்கு அவற்றை மாற்ற, அல்லது அழிப்பதற்கான அதிகாரம் உண்டா.. என பாதுகாப்பு முறைமைகள் வகைப் படுத்தப்பட்டிருக்கும் அதனால் அவ்வளவு எளிதில் அனுமதி அளிக்கப்படாத ஒருவர் கணினியின் ஒரு பகுதிக்குள் நுலைந்து அங்குள்ள தரவுகளைச்சிதைத்துவிட முடியாது.

இருந்தாலும் இத்தகைய பாதுகாப்பு வியூகங்களுக்குள் உள்ள ஓட்டைகளைப்பயன்படுத்தி சில அறிவுஜீவிகள் வலைத்தளங்களுக்குள் நுழைந்துவிடுவதும் அவற்றை இயக்கும் அதிகாரத்தை கையகப்படுத்திவிடுவதும் உண்டு.

வலைத்தளத்தைப்பற்றிய ஏதேனும் மாயை உங்களுக்கு இருந்தால் அதை உடனேயே விட்டுவிடுங்கள். காரணம் வலைத்தளம் என்பது நமது கணினியில் நாம் உறுவாக்கும் ஒரு தொகுப்பைப்(Directory அல்லது Folder) போன்றது தான். இங்கு இந்த தொகுப்பு ஒரு இணையப்பரிமாறியில்(Web Server) அமைக்கப்படுகிறது. அங்கு நமது தொகுப்புக்கு மட்டுமின்றி அதில் உள்ள ஒவ்வொரு கோப்பிற்கும் நாம் பல பாதுகாப்பு அரண்களை அமைக்க முடியும் ஆனால் நமது தனிக்கணினியில் கோப்புகளுக்கு அவ்வாறு பாதுகாப்பு கொடுக்கமுடியாது. நீங்கள் UNIX என்னும் வினைக்கலனைப்பற்றி அறிந்திருந்தால் இது உங்களுக்கு எளிதாகப் புரியும்

அந்த பாதுகாப்பு அரண்களாவன

-திறந்து பார்க்கும் உரிமை

-இயக்கிப்பார்க்கும் உரிமை

-தகவலை மாற்றும் மற்றும் அழிக்கும் உரிமை

என்றவாறு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்படுகின்றன,இந்த பாதுகாப்பு அரண்களுமே, கோப்புகளைப் பயன்படுத்துபவர்களுக்கு, அந்த கோப்புகளை அமைத்தவர்க்கு அதாவது உரிமையாளருக்கு எனத் தனித்தனியாக நாம் அமைக்கமுடியும். மேற்கூறிய பாதுகாப்பு முறைமைகளில் அனைத்துமோ அல்லது சிலவற்றையோ நாம் நமது தொகுப்புக்கோ, அல்லது கோப்புகளுக்கோ கொடுக்கமுடியும்.

எடுத்துக்காட்டாக என்னுடைய வலைத்தளம் www.geocities.com/paraman_web என்பது ஒரு தொகுப்பு, அதனுள் நிறைய கோப்புகள் வைக்கப்பட்டுள்ளன அதில் ஒரு கோப்பின் பெயர் ‘Index.htm ‘ என்று வைத்துக்கொள்வோம், அதற்கு நான் இயக்கிப் பார்க்கும் உரிமை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு கொடுத்துவிட்டு, மற்ற உரிமைகளை அவர்களுக்கு மறுத்துவிடுகிறேன் என்று வைத்துக்கொண்டால் நீங்கள் உங்களது மேய்ப்பனில்(Browser) என்னுடைய வலைத்தளத்திற்கு செல்லும்¢போது எனது ‘Index.htm ‘ என்னும் கோப்பை உங்களது வண்ணத்திரையில் காணமுடியும், ஆனால் அதை நீங்கள் அழிக்க வேண்டும் என்று நிணைத்தால், அதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லிவிடும். தக்க செயல்களின் மூலம் அதனைமாற்றிவிடலாம் என்று நினைத்தாலும் அதற்கான அதிகாரம் பெற்றவர் என்பதற்கான கடவுச்சொல்லைக்கேட்கும் (Password) அதைத்தராத பட்சத்தில் கோப்புகளை மாற்றுவதற்கும் அவர் அனுமதிக்கப்படமாட்டார்.

இத்தனை பாதுகாப்பு வளையங்கள் இருந்தும் எவ்வாறு வலைத்தளங்கள சிதைக்கப்படுகின்றன ?

இவ்வாறு வலைத்தளங்களைத் தகர்ப்பதற்கு, பிற கணினிகளில் நுழைந்து தரவுகளை அழிப்பதற்கு Hacking என்று ஆங்கிலத்தில் கூறுகிறேம், இவ்வாறு செய்பவரை Hacker என்று அழைக்கிறோம். இத்தகைய Hacker ஆக வேண்டுமெனில் அவர் கணினித் துறையில் நல்ல பண்டித்தியம் பெற்றவராக இருக்க வேண்டும். இணையம் செயல்படும் விதத்தை நன்கு அறிந்தவராகவும், இணையம் இயங்கும் UNIX, Linux போன்ற வினைக்கலன்களில் நல்ல அறிவும், அவ்வினைக்கலன்களின் நன்கு படித்து அவற்றின் உள்ள பாதுகாப்பு முறைமைகள் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றை எப்படி மாற்றலாம், ஒரு குறிப்பிட்ட கோப்பையோ அல்லது தொகுப்பினையோ பாதுகாப்பு வியூகத்திலிருந்து விடுவிப்பது என்ற நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகே இவ்வாறு வலைத்தளங்களைத் தகர்ப்பதற்கு முடியும்.

இத்தகைய Hacking மிகக் கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது, பிடிபட்டால் பல ஆண்டுகளுக்கு அவர் கம்பி எண்ண வேண்டும். இவ்வாறு நிறைய Hacker கள் அமெரிக்காவில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சிறந்த Hacker ஆவதற்கு அவர் எத்தந்த மென்பொருள்களில் பண்டித்யம் பெற்றிருக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை திரு.எரிக் எ~ச்.ரேமாண்டு என்பவர் தந்திருக்கிறார் அதை உங்கள் உபயோகத்திற்காக நான் தருகிறேன்

1. HTML – எனப்படும் உயர் தொடர்/எழுத்துக்குறிப்பிடு மொழியில் திறன்

2. Perl – எனப்படும் CGI நிரல்களை எழுதப்பயன்படும் மொழியில் பண்டித்தியம்

3. C என்னும் மொழியில் நல்ல திறமை,

4. Lisp – மொழி மற்றும்

5. Linux மற்றும் Unix வினைக்கலன்களின் பற்றிய முழுமையான அறிவு

இவை அனைத்திலும் அவர் பண்டிதனாக இருக்கவேண்டும், அதைவிட அவர் நல்ல விடாமுயற்சியும், அயராது உழைக்கும் தன்மைபடைத்தவராகவும், பல Hackerகளை நண்பர்களாகவும் கொண்டிருக்க வேண்டும், நீங்களும் கவுரவமான இத்தகைய Hacker என்னும் நிலையை எட்டிப்பிடிக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

அடுத்ததாக வங்கிகளில் பணத்தை அபேச் செய்ய என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இதில் பலருக்கு சந்தேகம் வரலாம் எப்படி இணையத்தின் மூலம் வங்கியிலிருந்து பணத்தை எடுக்க முடியும் ? நான் இராமநாதபுரம் கூட்டுறவு வங்கியிலிருந்து ஒரு லட்சம் எடுக்கவேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள் என்று தயவு செய்து கேட்¢காதீர்கள். நீங்கள் (Internet Banking) இணையவங்கியம் பற்றி அறியாதவராக இருந்தால் அவற்றைப்பற்றி சில வார்த்தைகள்

இணையவங்கியம் என்பது வங்கிகளில் நடக்கு அன்றாட நடவடிக்கைகளான பணத்தை நமது கணக்கில் சேமித்தல், பிறன் கணக்குக்கு பணத்தை மாற்றுதல், பணத்தை எடுத்தல், வங்கிக்கடனட்டைகளைப் பயன்படுத்துதல்… போன்ற வற்றை இணையத்தின் மூலமே செய்தலையே இணையவங்கியம் என்கிறோம்.

மேலை நாடுகளில் இவை மிகவும் பிரசித்தம் பெற்று விளங்குகின்றன, நமது நாட்டில் சில வங்கிகள் மட்டுமே இத்தகைய வசதிகளைக் கொண்டிருக்கின்றன. அமீரகத்தில் கூட ஒரே ஒரு வங்கி Emirates Bank International மட்டும் இந்த இணையவங்கிய வசதியை அளிப்பதாக அறிகிறேன். நீங்கள் இணையத்தில் இருந்த வாறே பணத்தை உங்கள் கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு மாற்றி விடலாம் ஆனால் பிறன் கணக்கிலிருந்து உங்களுக்கு மாற்ற முடியாது.

அப்படியானால் எப்படி வங்கியிலிருந்து பணத்தை எடுப்பது ? இது வங்கியில் வேலை பார்ப்பவர்களுக்கு அதாவது வங்கியின் EDP (Electronic Data Processing) துறையில் மென்பொருள்களை எழுதும் வேலை பார்ப்பவருக்கு மிக எளிது. இணையத்தில் இத்தகைய வங்கிய வலைத்தளங்களில் CGI (Common Gatway Interface programming) ஒரு வகை நிரல்கள்(programs) எழுதிப்பயன்படுத்தப்படுகின்றன இத்தகைய நிரல்களின் வாயிலாகத்தான் ஒருவர் பணத்தை தனது கணக்கில் இருந்து மாற்றும் போது அந்த அளவுப்பணம் பிறன் அதாவது அவர் தரும் மற்றொரு கணக்கிற்கு, கணினி வாயிலாகவே மாற்றம் செய்யப்படும் அவ்வேளையில் இத்தகைய நிரல்களில் பணத்தை மாற்றம் செய்யும் போது அதில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை நமது அல்லது நமது உறவினர்களின் கணக்கில் போய் விழுமாறு மாற்றி விட்டால் கூடிய சீக்கிரம் நாம் கோடாஸ்வராகிவிடலாம்.

இதுபோல இங்கிலாந்து நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் எனக்கு நினைவிற்கு வருகிறது. இத்தகைய புரோகிராமரில் ஒருவர் இங்கிலாந்தில் சரியாக இரவு 9 மணியிலிருந்து சில மணித்துளிகள் நடக்கும் அனைத்து பணப் பட்டுவாடாக்களில் இருந்து மிகக்குறைந்த அளவுப்பணம் அவரது கணக்கிற்கு மாற்றம் ஆவதாக மென்பொருள்களில் மாற்றம் செய்துவிட்டார். நடந்து என்ன ? ஒவ்வொரு நாளும் அவரது கணக்கில் பணம் குவிந்து வந்தது. அவர் கோடாஸ்¢வரராக மாறிவந்தார், ஆனால் சந்தேகமுற்ற அதிகாரிகள் அவரைப்பிடித்து விசாரித்ததில் மட்டிக்கொண்டார் மனுசன்…அப்புறம் என்ன கம்பி எண்ணுறதுதான்.

அப்படி நாம் வங்கியில் அத்துறையில் வேலையில் இல்லாமல் இருந்தால் எப்படி பணத்தை நமது கணக்கிற்கு மாற்றுவது ? இது கடினமான வேலைதான் நான் முன்கூறியது போல நீங்கள் ஒரு Hacker ஆக மாறவேண்டியது தவிர வேறில்லை.

 

 

  Thinnai 2000 July 02

திண்ணை

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

கணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்

This entry is part [part not set] of 10 in the series 20000702_Issue

6. ISDN என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ?


இதற்கு முன்பு நான் என்னுடைய இணையமும்-கணினிவலையமைப்பும் பற்றிய கட்டுரையில் ISDN என்பதனைப்பற்றி கூறியிருக்கிறேன் இன்று சற்று விரிவாகக் காண்போம்.

இணையத்தில் இரண்டு வகையான இணைப்புகளை நாம் பெறலாம் அவை Dial-up இணைப்பு மற்றும் (Direct)நேரடி இணைப்பு அதாவது அவை ஆங்கிலத்தில் Dial-up Networking and Direct Networking எனப்படும். இவ்விரண்டு இணைப்புகளிலுமே நாம் தொலைபேசிகம்பிகளின் மூலமாக இணையத்தில் உலவுகிறோம் முதல் ஒன்றில் அதாவது Dial-up இணைப்பில் நாம் நம்து கணினியில் இருந்து Web Server என்னும் கணினிக்கு என்களைச்சுழற்றி நமது User name மற்றும் Password ஆகியனவற்றைத் தந்து இணையத்துடனான இணைப்பை வேண்டுகிறோம். 24 மணி நேரமும் இணையத்திலேயே இருக்கும் அந்த Webserver என்னும் கணினி நமது User Name மற்றும் Password ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்து அவை சரியானவையாக இருந்தால் நம்மையும் இணையத்தில் ஒன்றாக இணைக்கின்றது. இல்லை எனில் இணைக்க முடியாது என்று சொல்லி நம்து வேண்டுகோளை மறுத்துவிடுகிறது.

ஆனால் இரண்டாவது வகையான நேரடி இணைப்பில் அதாவது Direct Networkingல் நமது கணினி மேற்கூறிய இணையப்பரிமாறியுடன்(Webserver) எப்பொழுதுமே, தனியாக இதற்கெனவே பெறப்பட்ட தொலைபேசிப்பினைப்பின் உதவியோடு, இனைக்கப்பட்டிருக்கும்

இவ்விரண்டில், Dial-up இணைப்பில் நாம் இணையத்தில் வலைப்பக்கங்களை மேய்ந்து கொண்டிருக்கும்போது நமது எண்ணுக்கு யாராவது தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றால் அவரால் நம்மைத்தொடர்புகொள்ள முடியாது ஏனெனில் அவர் இவ்வினைப்பு உபயோகத்தில் இருப்பதற்கான சத்தத்தையே கேட்க்க முடியும். ஆனால் இந்த நேரடி இணைப்பில் இந்தவித பிரச்சனைகள் ஏற்படுவது இல்லை. இத்தகைய நேரடி இணைப்பு பெரிய நிறுவனங்கள் தங்களது உள்ளிட வலையமைப்பை இணையத்தோடு இணைத்து அதை தனது நிறுவனத்தில் இருக்கும் அனைத்து கணினிகளிவழியாகவும் பயன்படுத்டும் படி செய்ய பயன்படுத்தப்படுகிறது. (இத்தகைய நேரடி இணைப்பு தனி நபருக்கு தேவையற்றது) நாம் இங்கும் தொலைபேசிக்கம்பியின் வழியே இணைப்பதாலும் பலர் ஒரே நேரத்தில் இணையத்தில் உலவுவதாலும் வேகம் குறைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

இச்சூழலில் இது போன்ற நிறுவனைங்களை இயக்க பல தொலைபேசி இணைப்புகளும் பெறவேண்டியுள்ளது உதாரணத்திற்கு தொலைபேசி, இணையம், தொலைநகல், மற்றும் பல. ஆக இதனைத்தவிர்த்து இவையனைத்தையும் ஒரே ஒரு பினைப்பில் செய்ய உருவா கக்ப்பட்டதே இந்த ISDN எனப்படும் Integrated Service Digital Network என்பதாகும்.

இத்தகைய பினைப்பில் தொலைபேசிக்கம்பிகள் தவிர Fibre Optics அல்லது Optical Fibres எனபடும் ஒளியிழை கம்பிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உலோகக்கம்பிகளுக்குப்பதில்லக தகவல்கள் ஒளியின் மூலம் கடத்தப்படுகின்றன. நமது சாதரண கம்பிகளில்(cable) பார்த்தீர்களேயானால் அதின் உள்ளே ஒரு தாமிர அல்லது அலுமினியக் கம்பி இருக்கும் ஆனால் இந்த fibre optics கம்பிகளில் அவை இருக்கமாட்டா.

இத்தகைய இணைப்புகள் ஒரே நேரத்தில் பல தரப்பட்ட தகவல்களை மிக விரைவாக எடுத்துச் செல்லவல்லவை- இவற்றின் ஒரு இணைப்பு பெறப்பட்டால் அதன்மூலம் நாம் இணையம், தொலைபேசி, தொலைநகல் மற்றும் 7 அல்லது 8 தொலைத்தொடர்பு சாதனங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தமுடியும். அக்கம்பியில் வரும் தகவல்கள் எந்த எந்த சாதனத்திற்கானவை என்பதைச் சரியாகப்பிரித்துத்தர ISDN Adopter என்னும் கருவி பொருத்தப்பட்டு அதனிருந்து நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள சாதனங்களுடன் இணைப்பு ஏற்படுத்தப்படும்.

இவ்வொரு இணைப்பில் நீங்கள் இணையத்தில் உலாவும் நேரத்திலேயே தொலைபேசியில் உறையாடவும்,அதேநேரத்தில் வரும் தொலைநகல்களைப் பரிசீலனை செய்யவும் இயலும்,அது மட்டுமல்லாது இதன் மூலம் தகவல் பரிமாற்றம் விரைவானது என்பதால் இனையத் தொலை காட்சிசந்திப்பிற்கு (Video Conferencing) இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

 

 

Thinnai 2000 July 02
திண்ணை

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

கணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்

This entry is part [part not set] of 8 in the series 20000625_Issue

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர


1957 களில் சோவியத் அரசு தனது ஸ்புட்னிக் என்னும் செயற்கைகோளை விண்ணில் ஏவி, வெவ்வேறு இடங்களுக்கு உடனுக்குடன் தொடர்புகொள்வதற்கான செயற்கைகோள் சார்ந்த ஒரு தொலைத்தொடர்புவலை அமைப்பை ஏற்படுத்தியது. இதனைக்கண்டு அதிர்ந்த அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை, ARPA அதாவது Advanced Research Projects Agency என்ற ஒரு புதிய அமைப்பை உறுவாக்கி, அதனிடம் கணினி சார்ந்த தகவல் தொடர்பு வலையமைப்பை ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டது.

கணினியை ஒரு கணக்குப்போடும் எந்திரமாகவெ பாவித்துவந்த அக்காலத்தில் அதனை ஒரு அதிவிரைவுத்தகவல் பரிமாற்ற சாதனமாக்கும் தனது நீண்ட நெடிய ஆராய்ச்சியில் இறங்கியது ARPA அமைப்பு. வெவ்வேறு இடங்களில் உள்ள கணினிகளை ஒன்றாக இணைப்பதற்கான கேட்பாடுகள் வடிவமைக்கப்பட்டன, தொலைதுரக் கணினிகளை தொலைபேசிக்கம்பிகள் வழியாக இணைப்பதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக 1968 ஜூன் மாதம் ARPA தனது ஆராய்ச்சியின் முடிவான ARPANET என்னும் கணினி வலையமைப்பினை அரசின் பார்வைக்குக் கொண்டுவந்தது.

இவ் ARPANET வலையமைப்பின் சிறப்பம்சங்கள் யாதெனில் இது வெவ்வேறு இடங்களில் உள்ள கணினிகளை வெவ்வேறு வழிகளில் ஒன்றாக இணைக்கிறது அதனால் ஒரு பகுதியில், இணைப்பில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ, அல்லது போர்க்காலங்களில் ஒருபகுதி வலையமைப்பே துண்டிக்கப்பட்டாலோ பிற பகுதி எந்த விதப்பதிப்பும் இன்றி தகவல் தொடர்புக்குப்பயன்படும். ஏதோனும் ஒரு வழியை நம்பிக்கொண்டிருக்கவேண்டியது இல்லை.

(நம்முடைய இணையமும் அவ்வாறே! உலகின் ஒரு பகுதியே அழிந்து பட்டாலும் மற்றொரு பகுதி எந்த வித பாதிப்பும் அடையாமல் தன்னுடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கும். இதற்குக்காரணம் இணையத்தில் பயன்படுத்தும் TCP/IP போன்ற கோட்பாட்டு மென்பொருள்களும், Router போன்ற சாதனங்களும் தகவல் பொட்டலங்களை அனுப்பும் போது பாதைகள் பாதிப்படையாமல் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டே அனுப்புகின்றன எனவே அப்பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட உலகப்பகுதிக்குள் சென்று காலங்கடத்தும் வாய்ப்பே இல்லை)

அடுத்ததாக இவ்வமைப்பு வெவ்வேறு வகையைச்சார்ந்த, வேறுபட்ட அமைப்பில் உருவாக்கப்பட்ட அதாவது நாம் பயன்படுத்தும், IBM வகைத் தனிக்கணினிகள் APPLE MAC வகைக் கணினிகள், MAINFRAME, அதிவிரைவுக்கணிகள்(SUPER COMPUTER) மற்றும் MINIக்கணினிகள் போன்ற கணினிகளையும் ஒன்றாக இணைத்து அவற்றிற்கு இடையிலும் தகவல்களைச் செலுத்தும் வல்லமை உடையதாக அமைக்கப்பட்டது இதனை ஆங்கிலத்தில் Machine Independant என்று கூறுவது உண்டு.

அதுமட்டுமல்லாது இது வேறுபட்ட வினைக்கலன்கள்(Operating System)பயன்படுத்தப்படும் கணினிகளயும் வெற்றிகரமாக இணைக்கும்படியும் உறுவாக்கப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் Platform Independant என்று கூறுவது வழக்கம்.

இத்தகைய ARPANET முதலில் அமெரிக்க இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டாலும், பின்பு ஆராய்ச்சிக்கான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பொருட்டு அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒரு வலையமைப்பை ஏற்படுத்தி அதைத்தம்மோடு ஒன்றாக இணைத்துக்கொண்டது- பின்னர் இது வியாபார நோக்கில் அமெரிக்க நிறுவணங்களை தம்மோடு இணைத்துப் பின்…….உலகமெல்லாம் பரவி இணையம் என்னும் பெயரில் வழங்கப்படலாயிற்று.

இப்பொழுது இவ்விணையம் யாருக்குச்சொந்தம் ?

குறிப்பிட்ட யாருக்கும் சொந்தமல்ல, அந்தெந்த நாடுகளின் இணையத் தொடர்பை அந்தெந்த நாடுகளே கவணித்துக்கொள்கின்றன, மற்ற நாடுகளுடனான அந்நாட்டின் தொடர்பை அவ்விரு நாடுகளும் ஒழுங்குபடுத்திக்கொண்டுள்ளன இருந்தாலும் வலைத்தளங்களின் பெயர், தகவல் பரிமாறும் கணினிகளின் IP முகவரி போன்றவை தனிச்சீர்மை(unique) பெற்றவையாதலால் அவை உலகளவில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன

அதற்காக The Internet Corporation for Assigned Names and Numbers மற்றும் Internet Assigned Numbers Authority போன்ற உலகலாவிய ஒழுங்குபடுத்தும் அமைப்புகள் செயல்பட்டு அவற்றை நெறிப்படுத்துகின்றன.

 

 

 

Thinnai 2000 June 25
திண்ணை

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர