- சேவல் கூவிய நாட்கள் – 8,9,10 – குறுநாவல்
- பிரியாணி
- தாள்ச்சா (ஆட்டுக்கறி சாம்பார்)
- அறிவியலில் ஒரு வாழ்க்கை
- விஷக் கிருமிகள்
- உந்தன் நினைவில்…
- ஒரு மலைக்கால மாலைப்பொழுதில்…
- கிளி ஜோசியம்…
- அர்த்தங்கள்
- இருட்டுப் பன்றிகள்!
- பயராத்திரி
- இந்த வாரம் இப்படி – அக்டோபர் 21 , 2001
- பழிக்குப் பழி என்பது கடமையா ?
- உ.வ.மை.யில்லாத உலகம் -1
- என் விழியில் நீ இருந்தாய் !
- கனடாவில் கார்
- பிரசாத்திற்குக் கல்யாணம்……!
- கலாநிதி பத்மா சுப்ரமண்யத்தின் ‘பகவத் கீதை ‘!
தி. கோபாலகிருஷ்ணன்

மூட மனமில்லாமல்
மழைக்காற்றில்
படபடக்கும் என் கதவு
ஈரத்தில் இறுகி
திறக்க இடம் கொடாது
எதிர் வீட்டு சன்னல்
குளிாில் கிட்டித்துப்
பல் நடு நடுங்கப்
பாடும் ஒரு நா
கதகதப்பு வேண்டி
கம்பளி போர்த்தும்
இரு செவி மடல்கள்
மழலை கட்டிய
மணல் வீடு
மழையில் கரையும்
காகிதக் கப்பல்
சேர்வதற்குக் கரையில்லாது
நெடும்பயணம் மேற்கொண்டு
மாடிவீட்டு குழாயின்
மழை நீர்ச் சுழலில்
சிக்கி மூழ்கும்
என் வாசல்
ஈரமாய்க்
கலங்கி நிற்கும்
ஈரம் உதற விாித்த சாக்கு
இரு மெல்லிய பாதம் படத்
தவமிருக்கும்
ஹ்ம்
விழா நாளின்
கம்பளத்திற்குக்
கிடைக்காத வரம்
மழை நாளின்
இந்தக் கந்தலுக்கா
கிடைக்கப் போகிறது ?