This entry is in the series 20011104_Issue

தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி


நேருக்கு நேராய்
நினைப் பார்க்க விழைகிறேன்
பின் ஏனோ
விழிகளைத் தழைக்கிறேன்

உன்னிடம் ஏதோ
சொல்ல நினைக்கிறேன்
ஆனால் இதழ் புதைத்து
மெளனம் காக்கிறேன்

வளைக்கரத்தை மெல்ல
வருட நினைக்கிறேன்
இருந்தும் இன்னும்
வாளாதிருக்கிறேன்

என் விந்தையான போக்குக்கு
பிறர் காரணம் அறியார்

அறிந்த நீயோ
இங்கே இல்லை

Series Navigation