வெயில் பிடித்தவள்
ரசிகவ் ஞானியார்
சாளரம் ஊடே நுழைகின்ற
கற்றைகளின் துளியொன்றினை
பிடிபொருளென நினைத்து
பிடிக்க முயற்சித்து
பிடிக்க முயற்சித்து
தோற்றுவிடுகிறது
அவள்
பல் முளைக்கா பருவம்
கற்றைகளை விளக்குமளவுக்கு
கற்கவில்லை நான்
கதிரவனே நீ
கற்றைகளுக்குப் பதிலாய்
கடிபொருளை அனுப்பேன்
எப்பொழுதும் தோற்கவேகூடாது
என்
வெயில் பிடித்தவள்
rasikow@gmail.com