- ர்ர்.. கீச்..கீச்…
- சுகம்
- நினைவுகள்
- அவசியம் ஒரு அஸ்திவாரம்.
- வழி மாறிய தென்றல்
- விந்தைதான்
- மீளத்துடிக்கும் மனம்
- பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும் – இரண்டு
- தேடுதல்
- வேதம்
- அறிவியல் துளிகள்-21
- பாரதத்தில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து [Narora Atomic Power Station]
- பேதம் உணராத குழந்தைமை (அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 55 )
- உணவு அருந்தும் நாகரிகம்
- பாதாள ரயில் நிலையம் – உரைவெண்பா
- ஏகாதிபத்தியமும் அடிப்படை வாதமும் – வளைகுடா அரசியலை முன் வைத்து
- புஷ்-ப்ளேர் நடத்தும் ஈராக் போரின் விளைவுகளும் இந்தியாவும்
- மாடன் மோட்சம்
- ரசிகன்
- சைக்கிள் முனி
- சைக்கிள்-
- கு ை க ர யி ல்
- அலைவரிசை
- கடிதங்கள்
- மானசரோவர் டாட்காம்
- Polynation is Pollination: Theatre and Arts from the Margins
- Tamil children song cassettes
- நினைத்தேன். சொல்கிறேன். இந்தியும். நந்திகளும்.
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 18 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- போர் நாட்குறிப்பு – ஏப்ரல் 5, 2003
மணோ

எத்தனை மாதங்கள்,
உன் அறிமுகம்
நான் சூல் கொண்டது ?
எத்தனை கிழமைகள்
உன் பாதச்சுவடியால்
என் பாதி பூத்தது ?
எத்தனை கதவுகள்
உன் வரவாய்
காத்திருந்து கரைந்தது ?
எத்தனை கனவுகள்
உன் பறிப்பிற்காய்
கவிதை ஆனது ?
எத்தனை மேகங்கள்
உன் நலமறிய
எனக்கு தூதாகிப் போனது ?
எத்தனை மின்னல்கள்
கள்ளமில்லா உன் சிரிப்பாய்,
எனக்குள் என்னையே
வெளுச்சம் காட்டியது ?
எத்தனை எத்தனை இரவுகள்,
இன்பமும், இயற்றலுமாய்,
‘இனி வேறொன்றில்லாததாய் ‘……!! ?
எல்லாம் ‘நேற்றாய் ‘ ஆனதோ ?
எதிர்பார்த்து ஸ்ருதி சேர்த்து,
எடுத்து வைத்த மனசுக்குள்
ஏதேதோ பிதற்றல்கள்,
ஒவ்வொன்றும் அபஸ்வரமாய்!
காலம் வரைந்த ஓவியமாய்
கிழிக்கப்பட்ட என் கவிதைகள்,
கிழியப்பார்க்கும் என் உயிராய்…..
கிடைத்த சங்கை,
கீறிப் பார்க்கும் , கீழ்த்தர மனிதர்கள்….
இதோ,
கீறல்விழுந்த கானமாய்,
உன் சாரல் தேடும் இந்தச் சின்ன மழை!!
பெய்யத் தான் வந்தேன்,
நனைய வைத்து விட்டாய்!!
மலரத்தான் வந்தேன்,
மறைந்து சென்று விட்டாய்!
பேச வந்ததையெல்லாம்
அலையாய், மணலாய், ஆற்றாமையாய்…
ஊமையாய் எனக்குள்ளே புதைத்துவைத்துவிட்டு
பெய்யாமலே போகிறேன்,
பேசாமலே போகிறேன்,
போகுமிடம் தெரியாது,
வந்த இடமும் அறியாது,
காற்றாய், நதியாய்,
வழிமாறிப் போவேனோ ?
என் சுவட்டை
நானே அழித்துக்கொண்டு
ஆனந்தமாய் ….
அசைவற்றுப் போவேனோ ?
திசை மாறிய கன்றாய்,
திக்கற்று சுழன்று
சூறாவளிக்குள் சுரமற்றுப் போகும்முன்,
வீசு தென்றலே, என்னிடம்
பேசு தென்றலே!!
**********
tamilmano@rediffmail.com