வசந்தத்தின் திரட்சி
திலகபாமா

கிளையிலிருந்து மாறுபட்டுத் திரும்பிய
விழுதுகளாய்
மண்ணோடு பிணைந்து விடும்
பிரயத்தணங்களோடு
எப்போதும் எதிர்த் திசையில்
ஒரு பயணம் நினைவுகளால்
கடந்து விட முடியாதவையாய்
மீண்டும் மீண்டும் பேசிப் போகும்
உன் வார்த்தைகள்
தொடர் செவி மடுத்தலில்
மறைந்திருக்கும் இன்னுமொரு பொருள்
முகம் காட்டிச் சிரிக்கும்
நிகழும் வசந்தங்களைப்
பதுக்கி வைத்துக் கொள்ள
திட்டமிட்ட வேளையில்
பயமுறுத்தும் இதற்கு முன்
தாண்டிச் சென்ற கோடை
இருந்தும்
என் காலடியிலெங்கும்
வசந்தத்தின் திரட்சி
பயத்தின் நிழல் மீறி
நாற்றுக்களாய் நெளிந்து
துளிர்விடத் துவங்கியிருக்கும்,
—-
mathibama@yahoo.com