This entry is in the series 20040415_Issue

திலகபாமா


கிளையிலிருந்து மாறுபட்டுத் திரும்பிய

விழுதுகளாய்

மண்ணோடு பிணைந்து விடும்

பிரயத்தணங்களோடு

எப்போதும் எதிர்த் திசையில்

ஒரு பயணம் நினைவுகளால்

கடந்து விட முடியாதவையாய்

மீண்டும் மீண்டும் பேசிப் போகும்

உன் வார்த்தைகள்

தொடர் செவி மடுத்தலில்

மறைந்திருக்கும் இன்னுமொரு பொருள்

முகம் காட்டிச் சிரிக்கும்

நிகழும் வசந்தங்களைப்

பதுக்கி வைத்துக் கொள்ள

திட்டமிட்ட வேளையில்

பயமுறுத்தும் இதற்கு முன்

தாண்டிச் சென்ற கோடை

இருந்தும்

என் காலடியிலெங்கும்

வசந்தத்தின் திரட்சி

பயத்தின் நிழல் மீறி

நாற்றுக்களாய் நெளிந்து

துளிர்விடத் துவங்கியிருக்கும்,
—-
mathibama@yahoo.com

Series Navigation