புதுவை பாரதிசோமசுந்தரம்
யாருக்கு வாய்க்கும்… ? இல்லை
எத்தனை பேருக்கு வாய்க்கும்…?
அரவணைப்பினில் அன்னை
வழிநடத்தலில் தந்தை
பயிற்றுவித்தலில் ஆசான்
தட்டிக்கொடுத்தலில் அண்ணன்
தோள் கொடுப்பதில் தோழன்
எத்தனை அவதாரங்கள்தான் உனக்கு…?
அன்பாய் பாசமாய்
நட்பாய் நேசமாய்
தோள் சாய ஏதுவான தோழனாய்
பகிர்தலில் உற்ற நண்பனாய், உயிர் காதலனாய்…
இன்னும் எத்தனை அவதாரங்களோ உனக்கு…?
பிரச்சனையின் தாக்கத்தால்
மடியில் முகம் புதைத்து அழ
முடியைக் கோதி கண்ணீர் துடைத்து
“அருமையாய் நான் இருக்க,
அடுத்தவர் சொல்லுக்கு ஏன் வருத்தம்?”
கேட்ட உனக்கு கோடி நன்றி!!
எதையும் மறைத்ததில்லை- மறைத்து எதுவும் பழக்கமில்லை…!!
பகிர்தலில் புரிதலில் மென்மை…
பார்வையில் சொல்லினில் நட்பு…
வருடம் இருபதானாலும் வருடும் பார்வை!!
யாருக்கு வாய்க்கும்… எத்தனை பேருக்கு வாய்க்கும்…
கணவனே நண்பனாய்… உற்ற உயிர் தோழனாய்…
–புதுவை பாரதிசோமசுந்தரம்
shriramba@yahoo.co.in
- விநாயக சதுர்த்தி
- தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்
- பிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு
- கிணறு/பறவையின் இறகு
- ஒருமனத் தம்பதிகள் ?
- காதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் !
- “இதற்கு முன்”
- அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? -2
- இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)
- “படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி
- 8$
- அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…
- சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்
- கடிதம்
- மகாகவி பாரதி பட்டி மன்றம்
- எஸ் பொ பவளவிழா
- ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்கள்
- நிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்
- இளையர்கள் இன்று
- நடக்க முடியாத நிஜம்
- யாருக்கு வாய்க்கும்….
- பரிட்டவணை
- மார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்
- அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்
- காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்
- புதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி
- சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3
- பார்கெய்ன்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 27
- தவறு யாருடையது?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23