விஸ்வாமித்ரா
அண்ணாவுக்கும், ஈவேராவுக்கும் பரிந்து, அப்படியே ஈவேராவின் அவமரியாதைத்
திருமணத்துக்கும் சப்பைக்கட்டு கட்டி நண்பர் பரிமளம் எழுதியுள்ள மடலைக் கண்டு
சிரிப்புதான் வருகிறது.
முதலில் இந்தத் திருமணத்தை அண்ணாவே எதிர்த்தது ஊரறிந்த உண்மை. அது
‘கட்சித்தலைவரின் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்ட செயல்’
என்றே அண்ணா பல மேடைகளில் பேசியிருக்கிறார். ஆனால் பரிமளத்துக்கு
மட்டும் இதில் எந்த முரண்பாட்டையும் காண முடியவில்லை என்றால் அவரின்
‘பகுத்தறிவு’ குறித்தே நமக்கு ஐயம் எழுகிறது.
மணியம்மையார் ஈவேராவிடம், (அண்ணாவின் சொற்படி) ‘பணிவிடை
செய்யவந்த பாவை’. அப்போது அவருக்கு இருபது வயது. கிட்டத்தட்ட ஆறு
வருடங்கள் வெளியுலகுக்கு ‘தந்தை, மகள்’ என்றே ஈவேராவும் மணியம்மையும்
தம்மைக் காட்டிக் கொண்டனர். பின்னர் திடாரென ஒருநாள் பதிவுத்திருமணம்
செய்ய முடிவெடுத்தனர். இதன் பின்னணி விவரங்கள் மற்றும் சில விரசமான தகவல்களை எழுதக்கூசி விட்டுவிடுகிறேன்.தேவைப்பட்டால் ஈவேராவின் சீடர் ஆனைமுத்து அவர்கள் எழுதிய ‘பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்’ என்ற நூலில் தேடிக்
கொள்ளுங்கள்.
சுயமரியாதைத் திருமணம் அரசால் அங்கீகரிக்கப் பட்டது 1968’ல்.
ஈவேராவின் இரண்டாவது திருமணம், ஒருவாரம் நோட்டிஸ் கொடுத்து நடந்த
பதிவுத்திருமணம், நடந்தது 1949’ல். அதற்கு முன்னும் பின்னும் தன் தொண்டர்
பட்டாளத்தில் பலருக்கும் ஈவேராவே சுயமரியாதைத்திருமணம் நடத்தி
வைத்திருக்கிறார். ஆனால் ‘தமிழர்தந்தையார்’ மட்டும் ஏன் பதிவுத்திருமணம்
செய்து கொண்டார் என்பதே அன்றும் இன்றும் கேள்வி.
சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தப் பதிவுத்திருமணம் என்று அவரை
விட்டுப் பிரிந்து வந்தவர்களே சொல்வது. அப்படி தனக்குப்பின் தன்
வாரிசுக்காக சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள சுயமரியாதைத்
திருமணக்கொள்கையைக் காற்றில் விட்டது எப்பேர்க்கொத்த முரண்பாடு!
1967 வரை சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதைத் திருமணத்தைத் தன்
இயக்கத்தைச் சார்ந்த பலருக்கும் செய்துவைத்தது எப்படி ? அவர்கள் சொத்து
எக்கேடாவது கெட்டுப் போகட்டும், என் சொத்து மட்டும் என் கையில் இருக்க
வேண்டும் என்ற எண்ணப்படிதானே அன்று சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதைத்
திருமணத்தை மற்றவர்களுக்கு, செல்லுபடியாகும் பதிவுத்திருமணத்தை தனக்கு என்று
வகுத்துக் கொண்டார்!
இதுதானா கொள்கைப்பிடிப்பு! ?
அன்புடன்
விஸ்வாமித்ரா
—-
viswamitra12347@rediffmail.com
- ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்
- பார்த்திப ஆண்டு உதயம்
- அதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
- மீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்
- பூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)
- மனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்
- வடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-
- உயிர்த்தேன்
- நினைவிருக்கிறதா ?
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-6
- தொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )
- ஹினா- மட்சுரி
- பால்வினைத் தொழில்
- அன்புள்ள ஆசிரியருக்கு
- இனவாத ஈவெரா ?
- தமிழவன் கட்டுரை பற்றி…
- பரிமளத்திற்குப் பதில்மடல்
- அவளால்…!
- என்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு
- பெரியபுராணம் – 36
- கீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- உயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ ?
- Pope John Paul II
- மழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- பிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை
- சேதி வந்தது
- பாம்புகள்
- இருந்ததனால்….
- ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!
- தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்
- கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1
- மகள்…
- முன்னேறு
- பயணம்
- இதற்காக இருக்கலாம்!
- சிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா ?
- சிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்
- தமிழ் அறியாத தமிழர்கள்
- கண்கள்