சேவியர்
0
அழுத்தங்களின்
வயல் வெளிகளில்
நீ
முளைப்பிப்பவற்றை வைத்தே
உன்
உண்மை முகம்
எழுதப்படும்.
அத்தனை தேடல்களும்
சந்திக்கப் பட்டபின்
உதடுகள் விரிவதில்
பெருமை என்ன இருக்கிறது.
பாம்புகளே இல்லா தேசத்தில்
புற்றுகளைப்
பற்றிக் கொள்வதில்
வீரம் என்ன இருக்கிறது.
திறமை என்பது
தவறும் சூழல்
தவறாமல் தொடரும்போது
தவறாமல் இருப்பது,
ஈரக் கூந்தலை
முடிந்து நடக்கும்
மேகப் பெண்கள்
வானில் இருந்தால்,
வற்றிய வயிறுகளோடும்
குழி விழுந்த
கிணற்றுக் கண்களோடும்,
வெடித்த தோல் வயல்கள்
அழுகை நடத்துவதில்லையே.
மழையே விழாத
மலைகளின் இடுக்கிலும்
முளைக்க முடியுமானால்
உன் விழிகளில்
பெருமை வடியலாம்.
வாரிசாய் வந்ததால் மட்டுமே
கிரீடம் சூட்டிக் கொள்ளும்
இளவரசனுக்கு
என்ன பெருமை இருக்க இயலும் ?
நீ யார் என்பதற்கு
உன் அடையாள அட்டை
காட்டுவதே
உனக்குப் பெருமை !
முடியும் என்னும்
நம்பிக்கை முனைகளை
உள்ளுக்குள்
முடிந்து வை.
நிதானமே பிரதானம்.
நிதானி.
அத்தனை அம்புகள்
சீறி வந்தாலும்,
சிரித்தே அவற்றை
சேகரித்து வை.
0
- துணையை தேடி
- சுவாசம்
- நிதான விதைகள்..
- திண்ணை அட்டவணை
- பயணமும் பண்பாடும் (எனக்குப் பிடித்த கதைகள்-18 -சா.கந்தாசமியின் ‘தேஜ்பூரிலிருந்து.. ‘)
- சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு
- ஒரு நாடகமும் மூன்று பார்வைகளும் (கிரீஷ் கார்னாடின் ‘அக்னியும் மழையும் ‘ நாடகத்தை முன்வைத்து ஓர் அலசல்)
- கோழிக்கறி வறுவல் – ஜப்பான் முறை
- வானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்
- நிம்மதி
- மிடில் க்ளாஸ்
- முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்
- கறை
- ‘உயிர்க் கவிதை ‘
- என் கிராமத்துக்-குடிசைப்பேத்தி!
- எல்லைகளின் எல்லையில்
- இந்த வாரம் இப்படி – ஜூலை 7, 2002 (திருச்சி பஸ், காவிரி,வைகோ, ஆப்கானிஸ்தான் கல்யாணம்)
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 5 -இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்
- அரசியல்
- தயவு செய்து தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்
- சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு
- கூறாமல்