This entry is in the series 20060120_Issue

திலகபாமா


கூண்டுக்குள்
வெட்ட பட்ட சிறகுகளுடன்
முன்னால் அளிக்கப் பட்ட
நீரும் சோறும் சலிக்க
கட்டி விட்ட வளையலில்
ஊஞ்சலாடும் கிளிகள்

முன்னிருக்கும் சோறு
கிளிக்காகவா ?
கூண்டுக்காரன் சதை பசி
தீர்க்கும்
தனக்கே தனக்கான உணவாயிருக்க

வெளியே நின்று கிளிக்காய்
கருத்து சுதந்திரக் கூட்டம் நடத்தும் பூனைகள்
நரகறி ருசித்துப் பழகி
முன்னும் பின்னும் எப்பொழுதும்
தின்னுவதற்கு தயாராய்
சட்டியை சூடாய் வைக்க
நெருப்பு மூட்டப் பார்க்க

கிளி தன் சதை எரித்து
காயத்ரி மந்திரம் செபிக்கிறது.
சிலுவையில் அறைந்த உடல்கள்
இற்றபின்
மூன்றாம் நாள் உயிர்க்க

எந்த கறுப்பு அங்கிகளுக்குள்ளும்
மறைத்து விட முடியா சுதந்திரம்
தான் வைத்திருந்த நெருப்பில்
தெரிவதற்காக

சூழுகின்ற தீயில்
உடைகின்றன கூண்டுகளின் துகள்கள்

எல்லாரின் நினைவுப் பாதையிருந்தும்
சதை ருசிகளை அழித்து சாம்பராக்கி
குடித்து போகின்றது
உள்ளுக்குள் செரிபடட்டும் கசன்களென
—-

Series Navigation