சூாியனின் சித்திரம்
Published November 11, 2005 • By
த.அகிலன்
த.அகிலன்

ஒவ்வொரு பூவிடமும்
இருக்கிறது சூாியன்
குறித்த சித்திரம்.
பூக்களைத்தமக்குள்
பதுக்கிக்கிடக்கும்
மொட்டுக்களின்
முதுகுகளில்
எழுதப்படுகிறது
சூாியனின் தோல்வி.
பூக்களின் முகங்களில்
ஒட்டிக்கிடக்கிறது
சூாியனின் புன்னகை.
ஆனாலும்
இரவில்
நிலவுக்குப்பயந்து
அவற்றை
உதிர்த்துக்கொண்டு
தம்மை உாிக்கின்றன
மரங்கள்.
த.அகிலன்