சீதை
சேவியர்.

0
அன்று காலை
ஒரு இராமன் வந்தான்
வில்லை ஒடிக்காமலேயே
விலகிச் சென்றான்,
விசாரித்த போது
விபரம் தெரிந்தது,
சீதையின் தோழி மிக அழகாம்.
0
பிறிதொருநாள்
தனியே காத்திருந்தாள் சீதை,
இன்னோர் இராமன்
தனியே வந்தான்,
சீதையை விட
வில்லே பிரதானமென்று
வில்லோடு ஓடிவிட்டான்.
0
பிறகு வந்த
சில இராமர்கள்
கலியுக புகைபோக்கிகள்
வில்லை தூக்கும் போதே
எல்லொடிந்து போனார்கள்.
இன்னும் சிலர்
சீதை,
வில்லை ஒடித்தால் மட்டுமே
மணக்க சம்மதம் என்று
இன்னொரு ஒப்பந்தம் இட்டார்கள்.
0
கடைசியில்
ஒர் நாள்
அப்பழுக்கற்ற இராமன் வந்து
வில்லையும் ஒடித்து
சீதையின் கரத்தையும் பிடித்தான்.
சில வருடங்கள் சென்ற பின்
ஓர்
அதிகாலை அவசரத்தில்
சீதை சினந்தாள்,
இராவணனிடம் கூட
புஷ்பகவிமானம் இருந்தது
0