வேதா
ஒரு பக்கம் ஓங்கிவளர்ந்த குன்று!
ஒடுக்கி இடுக்கில் ஒரு குடிசை,
குடிசை முன்னே ஒரு கிளி….
‘கீச் கீச் ‘ சொல்லியே, கிளிக்கு
கீழ்வானம்வரை நட்புவட்டம்…
கிளிக்குத் தெரியாத
கிளைகளும் உண்டோ ?
கீழே ஓடை,
ஓடி ஓடித் தீராத காலமாய்!
குட்டிகுட்டியாய் குன்றுகள்,
பாசம் படர்ந்து பதிந்திருந்த நினைவுகளாய்!
அழகிய தென்றல்,
இன்பமான இயற்கை,
இரவும் பகலும் கிறங்க வைக்கும்
இனிய ஸ்பரிசமாய்,
சின்னச் சின்ன மொட்டுக்கள்…
முட்டித் திறக்க
முயற்சியோடிருக்கும் முனைப்பில்
பொல்லாத வண்டுகள்…
எதிரே ஏகாந்தமாய்
பெரியதொரு ஆலமரம்,
என்ன இடிமழையிலும்
எதற்கும் கலங்காத மனம்போல்….
விரிந்து பரந்த வானம்
விரியத் துடிக்கும் இயற்கையாய்,
வெண்பஞ்சு மேகம்!
ஒவ்வொரு மாலையும்
ஒய்யாரமாய் சரியும் சூரியன்,
சிவந்துகிடக்கும் நெற்றிப்பொட்டாய்….
உடனே எழும் நிலா,
வெளிளைப் பிள்ளை மனதாய்!
சண்டை போட்டிருந்தால் – தேய்ந்து
சாதுவாய் இருக்கும்!
அன்பைச் சுமந்திருந்தால்
பிறையாய் பிதற்றி நிற்கும்!
எல்லாம் தீர்ந்திருந்தால் – பூர்ணமாகி
ஏகாந்தமாய் மயக்கும்!
அன்புக் கதிர்கள் பட்டால்
அமாவாசையாய்,
அவனுடன்
கரைந்து போயிருக்கும்!
என்ன செய்ய ?
எல்லாம் தான் தெரிந்திருந்தும்,
சண்டை போடவோ,
சமாதானம் செய்யவோ,
மோகத்தில் காயவோ, தன்
சோகத்தை மாய்க்கவோ,
மலரோடு கன்னம் உரசவோ,
மயங்கி மடியில் சாயவோ,
சேர்ந்து தேடிப் பறக்கவோ,
எதற்குமே இயலாத சாட்சியாய்,
ஒரு பக்கம் ஓங்கிவளர்ந்த குன்று!
ஒடுக்கி இடுக்கில் ஒரு குடிசை,
குடிசை முன்னே ஒரு கூண்டு….
சிறையா ? தண்டனையா ?
கூண்டுக்குள் ஒரு கிளி, தன்
இறந்துபோன இறக்கைகளுடனே….
piraati@hotmail.com
- வாரபலன் ஜூன் 24, 2003 (குயில்கள், கவிதைகள், குறுந்தொகைகள்)
- மனுஷ்யபுத்திரன்களும் மண்குதிரைகளும்.
- இரண்டு கவிதைகள்
- அறிவியல் மேதைகள் ஜான் லோகி பெரெட் (John Logi Baird)
- ஏறத்தாழ சூரியக் கிரகக்குடும்பத்தைப் போன்றே இருக்கும் இன்னொரு சூரியக் குடும்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
- ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்.
- சுஜாதா – எனது பார்வையில்
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-1
- நமது வசையிலக்கிய மரபு
- உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் (காளிந்திசரண் பாணிக்கிரஹியின் ‘நாய்தான் என்றாலும் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 67)
- பொருந்தாக் காமம்
- தண்ணீர்
- தமிழா எழுந்துவா!
- தீத்துளி
- கவி
- பிரம்மனிடம் கேட்ட வரம்!
- நான்கு கவிதைகள்
- கணையும் கானமும்
- உலகத்தின் மாற்றம்
- பார்க் ‘கலாம் ‘
- அன்புள்ள மகனுக்கு ….. அம்மா
- கூட்டுக்கவிதைகள் இரண்டு
- விக்கிரமாதித்யன் கவிதைகள்
- நகர்நடுவே நடுக்காடு [அ.கா.பெருமாள் எழுதிய ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம் :நாட்டார் தெய்வங்களும் கதைப்பாடல்களும் ‘ என்ற நூலின் ம
- பாருக்குட்டி
- இராமன் அவதரித்த நாட்டில் …
- மனிதர்கள்
- மரபணு
- தீராநதி
- விடியும்! (நாவல் – 3)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதிமூன்று
- கடிதங்கள்
- பேய்களின் கூத்து
- விலங்குகளின் வாழ்வும் விளங்கும் உண்மைகளும் (வாழும் சுவடுகள் – கால்நடை வைத்தியரின் அனுபவங்கள் – நூல் அறிமுகம்)
- சீச் சீ இந்தப் பழம் புளிக்கும்
- குறிப்புகள் சில-ஜீலை 3 2003 (நதிகள் இணைப்புத் திட்டம்-உயிரியல் தொழில்நுட்பமும்,வேளாண்மையும்,எதிர்ப்பும்-செம்மொழி-அறிவின் எல்லைகள
- எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்
- கண்காட்சி
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 9
- ‘ஓமெல்லாசை விட்டு போகிறவர்கள் ‘ ஒரு சிறுகதையும், அது குறித்த புரிதலுக்காக குறிப்புகளும்
- சிறையா, தண்டனையா ? ?
- மணி
- இரண்டு கவிதைகள்
- மூன்று கவிதைகள்
- தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்