அழகர்சாமி சக்திவேல்
கைகேயி கோபம் கணவனே நாசம்
கெளரவரின் கோபம் மாபாரத நாசம்
இஇராவணணின் கோபம் இலங்காபுரி நாசம்
இட்லரின் கோபம் இவ்உலகே நாசம்
மாபாவ ஆணவம் மனச்செருக்கு கொண்டோர்க்கு
தலைக்கனம் தந்துபின் தாழ்வுறச் செய்திடும்
கோபாதி தேவன் நானாடும் தாண்டவமே
தத்தகிட தகதகிட தகதகிட தித்தோம்
விரும்பாத மனிதரின் வார்த்தைகள் எல்லாம்
வேண்டுமென் றுரைத்ததாய் வீண்அர்த்தம் செய்வாய்
கரும்பான பேச்சிலும் கசப்பையே கண்டுஅவர்
அவமானம் செய்வதாய் அர்த்தங்கள் கொள்வாய்
என்னஅவர் சொன்னாலும் தன்னையே குறிப்பதாய்
எண்ணிநீ நோவாய் என்புருகத் தேய்வாய்
உன்னுடல் மாய்வதால் உவகையில் நானாடும்
தத்தகிட தகதகிட தகதகிட தித்தோம்
உற்றார் பகைஓங்கும் உயர்நட்பு விலகும்
உன்மகவு உனைக்கண்டு பயந்தருகில் வாரா
மற்றவரும் துச்சமாய் மதிக்கும் நிலையாகும்
மனைவிக்குக் கூட நீ மாபாரம் ஆவாய்
எல்லாம் தெரிந்ததென இறுமாப்பில் நீ வாழ்கையில்
வல்லவன் இஇன்னொருவன் வளர்ந்தாலே வரும் சினம்
வெல்லவும் இயலாது நீவாட நானாடும்
தத்தகிட தகதகிட தகதகிட தித்தோம்
இரத்தம் கொதிக்கும்மிக இதயம் துடிக்கும்
இரவிலே தூக்கம்போய் எதிர்ச்சக்தி மங்கும்
நரம்பெலாம் புடைக்கும் நார்த்தசைகள் இறுகும்
ஆண்மையும் குறையாகி அடிமைத்தனம் ஓங்கும்
வார்த்தை தடுமாறும் உரத்திடும் பேச்சு
வெளுத்திடும் முகம்மிக்க விரிந்திடும் விழிகள்உடன்
சோர்ந்திடும் உன்னுடல் பார்த்ததும் நானாடும்
தத்தகிட தகதகிட தகதகிட தித்தோம்
அழகர்சாமி சக்திவேல்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)
- சினத் தாண்டவம்
- அவசரம்
- வால்மீனில் ஆழ்குழி வடித்து அகிலாண்டத்தின் மூலத் தோற்ற உளவுகள் ! (Exploration of Comet with Deep Impact)
- தெற்கு கொரியாவின் அறிவியலாளர்கள் மனித உடல் உறுப்புக்களை தயாரிக்க பன்றிகளை மரபணு முறையில் தயார் செய்திருக்கிறார்கள்
- ஸ்பெயினில் மருத்துவத்திற்காக குலோனிங் (நகல்) செய்வது அனுமதிக்க திட்டம்
- நட்சத்திரங்களுக்கு பயணம்: அமெரிக்க நாசா அமைப்பின் கனவு
- பூமியொத்த கிரகம் இன்னொரு நட்சத்திரத்தில் கண்டுபிடிப்பு
- டைனசோர்கள் பறவைகளைப் போல சுவாசித்தன
- கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு கானம்…. ‘இதயப் பூக்கள் ‘ ஒலித் தட்டு.
- மானுட வாழ்வின் ஆனந்தம்-( வெளி ரெங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில் ‘ -கட்டுரைத் தொகுதி அறிமுகம்)
- தழும்புகளின் பதிவுகள் – ( வடு- கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை )
- இரண்டு முன்னுரைகள்
- தமிழ்க் கவிதை உலகம்
- கீதாஞ்சலி (31) ஏற்று அன்புச்சுடர் விளக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பால பருவம்
- கானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல் – முதல் பகுதி )
- ஒரு நீண்ட நேர இறப்பு
- போலி வாழ்க்கை
- அக்கினி மதில்
- இறைநம்பிக்கையும் ஆன்மீகமும்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2
- புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01
- இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. ?
- கால வெளி கடந்த மயக்கங்கள்
- தூண்டா விளக்கு
- வாழ்க்கை
- வீடு
- பெரியபுராணம் – 48 – திருநாவுக்கரசு நாயனார் புராணம்
- அன்புக் குடில்