This entry is in the series 20100206_Issue

ஆறுமுகம் முருகேசன்


ஒருபோல அமைவதில்லை
எல்லா பகல்களும்..

தெருவோர சிறுவனொருவனின்
கிழிந்த சட்டைபை
ஞாபகபடுத்துவதில்லை என்னை..

பூக்காரசிறுமியின் பூக்கள்
அழகுபடுத்த போவதில்லை
அப்பூக்கார சிறுமியை ஒருபொழுதும்..

அவளைப் பற்றிய பாடலொன்று
கேட்டுவிட முயற்சிப்பதில்லை
எல்லா பேனாமுனைகளும்..

அவன் வீசியெறிந்த நட்பு
காகிதம் கிழிக்க தயங்குவதில்லை..

காரணமற்ற கனவுகளை யெழுத
வாய்ப்பதில்லை வாய்ப்புகள்..

எல்லா இரவுகளும்
ஒருபோல அமைவதில்லை..

Series Navigation