வித்யாசாகர்
குவைத்தில், கொட்டா மழை கொட்டினாலும், மாதம் தவறாது முதல் வெள்ளிக் கிழமையன்று இலக்கிய கூட்டம் நடத்தும் ‘குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின்’ இன்றைய இலக்கிய நிகழ்வுகளும் தரம் குறையாதவை. மன்ற பொது செயலாளர் பாவலர் பிரமோத் ராஜன் தலைமையில் விழா துவங்க, தலைவர் உ.கு. சிவகுமாரின் உற்சாகமாக உரையினையடுத்து தம்பி தாராவின் ‘தமிழோசை’ பற்றிய சிறப்புக் கவிதை சக்கைபோடு போட்டது.
அதை தொடர்ந்து, கவிதையில் காதல் என்ற தலைப்பில் பாவலர் வித்யாசாகரும், கவிதையில் வாகை என்ற தலைப்பில் பாவலர் கருங்குளம் சிவமணியும், கவிதையில் வீரம் என்ற தலைப்பில் பாவலர் ஆனந்த ரவியும், இன்னும் கவிதையில் ஈரம், கவிதையில் ஈகை என ஐந்து தலைப்புகளில் ஐயா சாதிக் பாஷா தலைமையில் கவியரங்கம் கர ஓசைகளோடு முடிய, ஐயா கவிசெய் சேகர் அவர்களின் தலைமையில் தேனினும் இனிது தமிழ் என்ற தலைப்பில் பாவலர் முனு.சிவசங்கரனும், சங்ககால புத்தகங்களை படி என்ற தலைப்பில் பாவலர் பழ கிருட்டிண மூர்த்தியும், இஸ்லாத் ஒரு பார்வை தலைப்பில் பொறியாளர் திரு ராஜசேகரும், கம்யூனிசம் பற்றி ஒரு பகிர்வு என்ற தலைப்பில் திரு சியாம் அவர்களும் என வேறுபட்ட தலைப்புக்களில் கருத்தரங்கமும் விமரிசையாக நடந்தேறியது. இடை இடையே பாடகர்கள் கணேஷ் மற்றும் இலங்கேஸ்வரனின் பாடலில் சொக்கிப் போக முடிந்ததும், முடிவில் இப்தார் விருந்துமென வயிறும் மனதும் அறிவும் நிறைந்து விழா நிறைவுற்றதென்பது மிக மகிழ்விற்கும் மிக்க நன்றிகளுக்கும் உரிய உன்னத செயலாகும்!
விழாவில் தமிழ் தமிழர் சார்ந்த கேள்வி பதில் போட்டியும் நடைபெற்றது, அதில் போட்டிக்கான பரிசை பாவலர் முனு.சிவசங்கரன் பெற்றுக் கொள்ள , இறுதியாய் அரங்கத்தில் மிச்சமிருந்த வெற்றிடத்தை தன் நன்றியுரையினால் நிறைத்து, கலந்து சிறப்பித்த அனைவருக்கும் இன்முகத்தோடு விடை தந்தார் முன்னாள் பொறுப்பாளரான பாவலர் விட்டுக் கட்டி மஸ்தான் அவர்கள்.
தமிழ்; இதுபோன்ற நல்ல மன்றங்களாலும், உயர்ந்த படைப்பாளிகளாலும் ஆர்வலர்களாலும் நிலைத்தே நீடு வாழுமென்ற நம்பிக்கை; தனையறியாது ‘விடைபெற்ற அனைவரின் மனதிற்குள்ளும்’ பூத்து விரிந்திருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை!
- சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12
- அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
- துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
- மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்
- பார்சலோனா -3
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி
- முள்பாதை 46
- குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு
- MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organizes Monthly screening of Documentaries and Short films
- தந்தையும் தாயுமான அதிபர்.
- திலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா
- பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி
- முள்பாதை = வாசகர் கடிதம்
- பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு
- கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
- பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
- மேட்ரிக்ஸ் தமிழில்
- யெளவனம்
- அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!
- இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)
- உவமையும் பொருளும் – 1
- கோகெய்ன்
- இசட் பிளஸ்
- எரியாத முலைகள்
- மறுபடியும் அண்ணா
- காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.
- காதுள்ளோர் கேட்கட்டும்
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை
- குற்றமிழைத்தவனொருவன்
- சும்மாக் கிடந்த சங்கு
- கடிவாளம்
- இரண்டு கவிதைகள்
- தாணிமரத்துச் சாத்தான்…..!
- வனச்சிறுவனின் அந்தகன்