சேவியர்
0
இதொன்றும்
பிள்ளை விளையாட்டில்லை
சொரசொரப்புத் தூரிகைகள்
முகத்தைச் சுவராக்கி
பல மணிநேரம்
ஓவியம் வரையும்.
பிரத்யேக ஒப்பனை ஆடை
பிராணனை
பிழிந்தெடுக்கப் பிரியப்படும்.
செண்ட,
மத்தாளம், சிஞ்சில
என
இசைக்கருவிகளின்
அருவிக்குள் அரங்கேறும்
எங்கள் உதடுவிலகா
ஊமை நாடகம்.
கைகளையும்
கண்களையும் விட அதிகமாய்
தசைகள்
பேச வேண்டும் இங்கே,
இலக்கியம்
இசை, நடனம், நடிப்பு
ஓவியம் என,
அத்தனை கலவைகளையும்
ஒற்றை சீசாவில்
ஒளித்து வைத்த கலைதானே
இந்தக் கதகளி.
ஸ்ருங்காரம், ஹாஸ்யம்
காருண்யம், ரெளத்ரம்
வீரம்,பயானகம்,
பீப்ஹால்ஸம், அல்புதம்
ஸந்தம்..
என
கேரளத்து நிர்த்த சாலைகளில்
நிறுத்தாத நவரஸப் பயிற்சி.
கண்களையும்
கைகளையும்
அபினயம் பிடித்துப் பிடித்து
நடித்தாலும்,
நான்கு பேருக்காக
ஓர்
நாட்டிய மேடை இருக்கும்.
எங்கள் வறுமையின்
சுருக்கங்களை
இந்த
அடர் சாயங்கள்
மறைத்துக் கொள்வதே பெரும்
ஆறுதல் எங்களுக்கு.
ஆனாலும்
எங்கள் கண்களை மீறி
குதிக்கும்
கண்ணீர் கவலைகள் எல்லாம்
சாயங்களின் மேல் சில
சாலைகளை
இட்டுச் செல்லும்.
எங்கள் வேர்கள் எல்லாம்
கலாச்சாரக் காடுகளில்
ஆழமாய் கிடந்தாலும்,
கிளைகள் எல்லாம்
வெளியூர்க் காற்றையே
சுவாசித்துக் கிடக்கும்
கவலை தான் எங்களுக்கு !
0
Xavier_Dasaian@efunds.com
- நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)
- புதிய வகையான கடல் அலை கண்டறியப்பட்டுள்ளது
- விளக்கெண்ணெயிலிருக்கும் விஷத்துக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன் (1888-1970)
- அறிவியல் மேதைகள் சர்.சி.வி. இராமன் (Sir.C.V.Raman)
- காவிரி நீர் போர்
- பொருளின்மை என்னும் கணம்நோக்கி (எனக்குப் பிடித்த கதைகள் – 26 -தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ )
- கவிதாசரண் பத்திரிக்கை
- நாய் வாங்கும் முன்பாக
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 6 , 2002
- தோழியரே! தோழியரே!
- இதுவும் உன் லீலை தானா ?
- தேவதேவன் கவிதைகள் 5: வானும் ஒளியும்
- ஒரு கடிதம்…
- எழுத / படிக்க
- குப்ஜாவின் பாட்டு
- வீர நாயகர்களுக்கும் விதியால் பலியானவர்களுக்கும் வணக்கம்
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 6 2002 (காவிரி, முஷாரஃப், ஸ்டாலின், மனீஷா,மேற்கு வங்கம், சீனா)
- இருவேறான நீதிமுறை அளவுகோல்களுக்கெதிராக…….. ஆகன் சமாதானப்பாிசு
- குழந்தைகளை புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தவறேதும் இல்லை
- காவிரி நீர் போர்
- அதுவரை காத்திருப்போம்.
- புதிய பாலை
- யார்தான் துறவி ?
- பயணங்கள் முடிவதில்லை
- இரு கவிதைகள்
- கவலையுள்ள மனிதன்!
- நடிகர்கள்!
- கலாச்சாரக் கதகளி