டான்கபூர்
குடி நுகரும் ஊருக்குள்.
வாவிக்குள் வந்த மாதிரி ஊர்ச் சல்லுக்குள்.
ஜனநாயகம்
காயாத கருவாட்டில் புழுக்கும்.
தலைக்குள் இருந்து வண்டுகள் உமிழும்.
பச்சைப் பாம்பு ஒன்று
மனிதாபிமானத்தின் இறக்கை விரிக்கும்.
வறண்ட நாக்கு மக்களுக்கு பேசும்.
எதிர்கால நாற்காலி முதிரையில் இருக்க
சுனாமிக்கு மூக்குத்தி குத்தி விழா காணுகிறது.
நீலமாய் ஒரு பாம்பு.
சுனாமியால் நிரம்பிய வெளிநாட்டுச் சுரியை
நிரப்பிக் காண்பித்து
தெற்கில் அது சட்டை கழற்றுகிறது.
காட்டையும் களனியாய் காண்கிறது.
வடக்கையும் கிழக்கையும் என்னில் போர்த்துவேன் என்று
சட்டையை மாட்டுகிறது.
சிவப்பாய் இன்னொன்று.
கண்களை உருட்டும்.
முடியைக் கோதும்.
பிணம் இனித் தின்னேன் எனக் கத்தும்.
உழைப்பாளியைத் தீண்டேன் என முழங்கும்.
ஏழைகளின் கண்ணீர் உவர்த்தலாகாது எண்ணுகிறது.
இப்பாம்பு,
அலகொன்றை எடுத்து சிலம்பாடும்.
தனியிடத்தில் நிற்காது.
இனிப்பூட்டி அழைக்க விலாங்காக மாறியும் வாழும்.
சிறுபான்மைக்குள்ளிருந்து சீறுகிறது.
சுனாமியின் முடிபிடுங்க வந்திறங்கும்.
சுனாமியின் நகம் பிடுங்க வந்திறங்கும்.
ஊருக்குள்.
மீண்டும் பேயர்களைக் கொத்த.
எல்லா வர்ணப்பாம்புகளும்
சுனாமி பூசிய கரியுடன் கியூவில்….
டான்கபூர், இலங்கை
- கலர்ப் பாம்பு கரை ஒதுங்கி
- புகாரியுடன் ஒரு சந்திப்பு
- நண்பர் பரிமளத்திற்கு எனது பதில்
- குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998
- சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ – கதை பற்றிய என் எண்ணங்கள்
- கவிதையென்பது
- சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ பற்றி – படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல…
- கனடாவில் புதுப்பிக்கப்படும் பழைய கனநீர் அணுமின் நிலையங்கள்
- கார்டோசாட் -1 : தொலையுணர்வு செயற்கைக்கோள்
- கீதாஞ்சலி (21) நிரந்தரமாய்க் கண்மூடும் நேரம்! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மரம்
- என் மழை தட்டுகையில்
- பண்பு கெட்டுப் போர் புாிதல்..
- பெரியபுராணம் – 39 — 23. உருத்திர பசுபதி நாயனார் புராணம்
- ஊரு வச்ச பேரு
- நிதர்சனம்
- கோடை
- குழந்தை
- அயான் ஹிர்ஸி அலி – கருத்துகளுக்கு தரும் விலை
- இந்தியாவில்,மொழிகள்,அதிகாரம்,மற்றும் திராவிடத் தத்துவம்
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 1
- ‘தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்! ‘ – ஈ.வே.ரா.வின் முழக்கம்
- சில ‘சொந்தக் குழந்தை ‘களின் பார்வையில் ‘தமிழர் தந்தையார் ‘
- கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 2
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி பாகம்:3)
- ஒரு மஞ்சள் மயக்கம்
- தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் (2)
- அம்மம்மா