கத்தியின்றி இரத்தமின்றி வன்முறை
திலகபாமா

வன்முறை
குண்டு துளைப்பும்
குருதி இழப்பும் மட்டுமல்ல
என் அன்பின் சுகங்களை எல்லாம்
அனுபவித்து விட்டு
நீ திருப்பித் தராததின்
வலியைச் சொன்னால்
நிராகரிக்கும் உன் இயல்பில்
யாருமற்ற ஏதுமற்ற
அகதி வாழ்வின் வலியும்
எனை கெட்டிக் காரியென
சொல் தூவி
உனக்காணவளாய் மாற்றிக்
கொள்ளும் தொடர் வாழ்வில்
பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொள்ளும்
மூச்சுத் திணறலின் வலியும்
வன்முறைதான்