This entry is in the series 20090507_Issue

திலகபாமா


வன்முறை

குண்டு துளைப்பும்

குருதி இழப்பும் மட்டுமல்ல

என் அன்பின் சுகங்களை எல்லாம்

அனுபவித்து விட்டு

நீ திருப்பித் தராததின்

வலியைச் சொன்னால்

நிராகரிக்கும் உன் இயல்பில்

யாருமற்ற ஏதுமற்ற

அகதி வாழ்வின் வலியும்

எனை கெட்டிக் காரியென

சொல் தூவி

உனக்காணவளாய் மாற்றிக்

கொள்ளும் தொடர் வாழ்வில்

பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொள்ளும்

மூச்சுத் திணறலின் வலியும்

வன்முறைதான்


Series Navigation