This entry is in the series 20010917_Issue

வ.ந.கிாிதரன்


அந்தரத்திலொரு
தோடஞ்சுளையாகத்
தொங்குமிந்த
பிறை நிலவின் தனிமை
கண்டு நெஞ்சம்
கலங்கும். ஆனாலும்
ஒரு திருப்தி.
இந்தப் பிறைநிலவும்
இன்னொருநாளில்
முழுநிலவாகி
முறுவல் பூத்திடுமேயென்ற
நினைவில் தான்.

அண்டம் கலங்க
இடியிடித்து
மின்னிப் பெய்யுமிந்த
மழை ஒரு கணம்
அகத்தே அச்சம்தனைப்
பரப்பும்.
இருந்துமொரு
நிறைவு.
இம்மழையை நம்பி
நெல்லும் வேறு பயிரும்
இருக்குமென்ற
நினைவால் தான்.

கவலைகளற்றுக்
கட்டுக்களற்றுக்
கடுகி மறையுமிந்தச்
சிட்டுக்களைத்
துரத்தும் கழுகுகளை
நினைத்தால்
துயரம்தான்.பெருமிதப்
பறவை கூடவே சிறகடித்துப்
பறக்கும். சுதந்திரக்
காற்றினைச் சுவாசிக்கும்
இவற்றின்
இருப்பையெண்ணி.

20010917_Issue

பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு.