மொழிபெயர்ப்பு கவிதைகள்
அப்துல் கையூம்
பாட்டுக்கோர் புலவன் பாரதியே !
பைந்தமிழ்ச் சாரதியே !
பகிரங்கமாய் உனக்கோர் கடிதம் .. ..
பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்க்க வேண்டும் என்றாய். உன் வாக்கை படு சீரியஸாக எடுத்துக் கொண்டு நானும் சில பிறமொழி அறிஞர்களின் கருத்துக்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
திருமணம்
திருமணம் புரி !
அடக்கமான மனைவி
அதிசயமாய்
அமைந்து விடில்
அகமகிழ்ந்து சிரி !
கணக்கு உனது
கணிசமாய் மாறிப்போனால்
கவலையே படாமல்
காவி தரி !
வங்கி
குடை
கடன் கொடுப்பார்;
வானிலை
தெளிவாய் இருக்கையில்.
‘படக்’கென
பிடுங்கிக் கொள்வார்;
அடைமழை
விடாது பெய்கையில்.
– By Robert Frost
வேடிக்கை
ஆக அனைத்தும்
நகைப்பூட்டும் ..
பிறருக்கு அது
நடக்கையில்
மட்டும் !
– By Will Rogers (1879 – 1935)
ஹோனோலூலூ
விடுமுறை கழிக்க
படுஜாலி பிரதேசம்.
எல்லாமே கிடைக்கும்..
மழலைகள் களிக்க
மணற்வெளி;
மனைவி காய
வெயில் குளியல்;
ஆங் . மறந்து விட்டேனே ..
மாமியார்களுக்கென
பிரத்யேகமாக
கடல்நீரில்
சுறாமீன்கள் !!
– By Ken Dodd
சுற்றுச் சூழல்
பின்தங்கிய நாட்டில்
நீர் குடிக்க யோசி !
முன்னேறிய நாட்டில்
சுவாசிக்க யோசி.
அவை யாவும் தூசி !
Jonathan Raban
பயம்
ஆட்டுக்கு
அருகில் செல்ல
எனக்கு பயம் !
கழுதைக்குப் பின்னால்
கடந்துப் போக பயம் !
முட்டாளிடம் நெருங்க
முழுவதும் பயம்
அவனது
நாலாபுரத்திலும் !!
– By Edgar Watson Howe
பிரம்மச்சாரிகள்
பிரம்மச்சாரிகளுக்கு
கணிசமான வரியினை
கடுமையாக விதியுங்கள்.
பல மனிதர்கள்
வதைக்கப்பட ..
சில மனிதர்கள் மாத்திரம்
மகிழ்சியில் திளைக்க ..
இது என்ன
பாரபட்சம் ..?
(திரு. வாஜ்பாய் அவர்களும். திரு. அப்துல் கலாம் அவர்களும் என்னை மன்னிப்பார்களாக)
By Oscar Wilde
பிரபலங்கள்
பிரபலமாய் இருப்பதில்
பெரியதொரு வசதி.
அவர்கள்
போரடித்தாலும் கூட
ரசிக்கத் தெரியாதது
இவர்களது குற்றமென
எண்ணிக் கொள்கிறார்கள்
அப்பாவி மனிதர்கள் !!
By Henry Kissinger
vapuchi@hotmail.com
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 8
- சம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்
- கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!
- லூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு
- “தெருவிளக்கும் குப்பிவிளக்கும்”
- யுவராசா பட்டம்
- தீயாய் நீ!
- ஒரு நாள் உணவை…
- பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா?
- கஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி
- வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்
- ஒரு தாய் மக்கள் ?
- புலன்கள் துருத்தும் உணர்வுகள்
- பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ்
- காற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் !
- புலம்பெயர்ந்த கனடா
- மலையாளம் – ஓர் எச்சரிக்கை
- பின்னை தலித்தியம்:அர்சால்களின் எழுச்சி
- முடிவென்ன?
- செக்கு மாடும் பௌர்ணமி நிலவும்
- “பாலைவனத்தில் பூக்களைத் தேடி”
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் விழும் அகிலக் கற்கள் !(கட்டுரை: 17)
- கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்
- “கடைசி பேருந்து”
- ‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்
- நந்தனார் தெருக்களின் குரல்கள் – விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்
- கோட்டாறு பஃறுளியாறான கதை
- திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II
- இரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்
- ராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்
- தாகூரின் கீதங்கள் – 17 – உன்னுள்ளே தாய் மகத்துவம் !
- மொழிபெயர்ப்பு கவிதைகள்
- இன்னும் ஓர் இஸ்லாமிஸ்ட்
- FILMS ON PAINTERS
- எஸ். ராமகிருஷ்ணன் இணையதளம்
- வெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு
- பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்
- National Folklore Support Centre
- நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்: ஜெயமோகன் கட்டுரை குறித்து..
- ‘உலக தாய்மொழி நாள்’
- குடும்பதின வாழ்த்துக்கள்