மௌனமாய் ஒரு விரதம்

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

காவிரிக்கரையோன்


“இன்றைக்கு மௌன விரதம்” தாள்
நிறப்பி அனுப்பிய பின்
கண்ணால் வார்த்தைகள் வார்த்து

நீ கோர்த்த வாக்கியங்கள் எனக்கு
புரியவில்லை என்ற பயமேன் உனக்கு?
இதயத்தின் துடிப்பு இதயத்துக்கு
அந்நியமாய்ப் போய் விடுமா?

புல்லிடுக்கு பனித்துளிக்கு
பகலவன் கண்கள் எதிரியாய்
போன கதை தெரிந்திருக்கும்தானே
உனக்கு,

அப்படி உன் விரதம் வீழ்த்த என்
கண்களும் உன் கண்களும் தயார்
நிலையில் இருப்பது தெரியவில்லையா?

நீ முடிப்பதாய் தெரியவில்லை,
நானும் முடிக்க சொல்வதாய் தெரியவில்லை,
அதுவரை

விரதங்கள் கோபிக்கும் உன் மௌனத்தை
நீ தகர்த்தெறியும் அந்த மணித்துளிகளின்
வரவுக்காய் காத்திருக்கிறேன் நான்…

– காவிரிக்கரையோன் MJV

Series Navigation

காவிரிக்கரையோன்

காவிரிக்கரையோன்