- வதை
- தமிழவன் கவிதைகள்-ஏழு
- கவிக்கட்டு 8 – யார் நீ ?
- தீவு
- பூமகன்
- கவிதைகள்
- அறை
- இல்லம்…
- அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்
- நாய்கள்
- பார்த்தசாரதியும் பகவத்கீதையும்
- கவிதைகள்
- உள் நோக்கு
- தாய் மனம்
- கவிதைகள்
- … உலக போலீஸ் …
- ரேடியோவின் கதை
- தேனீ – மொழியும் பணியும்
- அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great
- சீதைகளைக் காதலியுங்கள் !
- பிறந்த மண்ணுக்கு – 3
- நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21
- இலவசம்
- வலை
- காத்திருப்பு
- வள்ளி வோட்டு போட போறா!
- மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)
- கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்
- பலியர்களுடன் உரையாடல்
- தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்
- வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்
- தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
- பூமித்தின்னிகள்
- தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 3
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7
- குண்டலகேசி – சில குறிப்புகள்
- ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….
- மந்திர உலகின் தந்திரங்கள்
- கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்
- நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்
- ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.
- மெய்மையின் மயக்கம் – 1
- தண்டவாளங்கள்
- இருதுளி கண்ணீர்
- சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,
- ஆயுத எழுத்து பற்றி
- Dahi pasanday
- ஜஃப்ராணி ஷாமி கபாப்
- கடிதங்கள் மே 27,2004
- கடிதங்கள் மே 27, 2004
- கடிதம் மே 27,2004
- பொன்விழாக் கொண்டாட்டம்- 3
பிச்சினிக்காடு இளங்கோ (singapore)

குருதியின்
அலை அதிர்வில்
அண்டந்தழுவும்
அரவணைப்பின் எதிரொலி
எடைக்கு எடையானபோது
எழுந்துநிற்கும்
தராசு முள்ளாகத்
தானே நிமிர்ந்து…
விதையாக
ஏதோர் எல்லையில்
விழுந்து
விருட்சமாய்ப் பூப்பூத்து
நிழல்பரப்பி…
எல்லைகளில்லாமல்
எல்லாத்திசையிலும்
மனத்தை
மணமாய்
அலை எழுப்பி…
உணர்வின் மொழியை
இன்னொருமொழியில்
இறக்குமதி செய்து…
கொள்கலன் நிறம்பூசிய
தண்இராகி
கண்இரைக்
கைகளிலே சேமித்து
பூமி
கறைபடும்போதெல்லாம்
கரைந்து கரைந்து
ஆகக்குறைந்த வங்கிக்கணக்காகி
கணமும் இதயம்
ரணத்தால் கனத்து ஆவியாகும்
கவிஞனை
ஆளுக்குஆள்
நிறம்பூசி
முத்திரை குத்தாதீர்கள்
கடவுச்சீட்டைக் காட்டச்சொல்லிக்
கறைபடுத்தாதீர்கள்
குடிநுழைவு எனும்பெயரில்
அவன் முகத்தில்
கோடுகிழிக்காதீர்கள்
அவன்
எல்லைகளற்ற
இயற்கையின் புதல்வன்
பூமிக்காகக்கண்விழித்த
பூமகன்.
—-
ilango@stamford.com.sg