This entry is in the series 20001210_Issue

சத்யன் சுந்தர்


புல்லாங்குழலின்

துளைவழி பெருகும்

நதியின் பிரவாகத்தில்

மறைகிறது சிந்தை

அழுத்த நெகிழ்வுகளில்

விரைந்து வழுவுகிறது மனம்

ஆழச் சுழல்களில் சிக்கி அழுந்தித்

தாளமிடுகிறது நாளத் துடிப்பு

ஏகாந்த வெளிதனில்

ஸ்வரங்களின் இன் துணை

அலை தளும்பி வழிகிறது நதி

தீயும் தேனுமாய்க் கசிகிறது காற்று

திசையற்ற பெருவெளியில்

தொலைந்த என்னை

மீண்டும் அறிந்தேன்

அதனால் உன்னையும்.

(செளரஸ்யாவுக்கு)

Series Navigation