மீ.வசந்த்

‘விடை பெறுகிறேன் ‘- வருத்தத்தை தந்தது.இது வரை ஏராளமான நல்ல கட்டுரைகள் படைத்த படைப்பாளி மனம் நொந்து இனி திண்ணை யில் எழுத மாட்டேன் என சொல்வது வருத்தமான விசயம். இது தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடா ? ?
திண்ணையின் வாசகன் என்ற முறையில்,திண்ணை எல்லோருடைய கருத்துக்களையும் வெளியிிடும் ஒரு நடுநிலையான இனைய இதழ் என்றே அறியப்பட்டுள்ளது.
எழுத்தாளர்களை பொருத்தவரை அவர்களுக்கு தலைக்கனம் அதிகம் என்ற ஒரு கருத்து பரவலாக அனைவரிடமும் இருந்து வருகிறது.அவர்களுக்குள் நடக்கும் எழுத்து யுத்தம் தமிழை காயப்படுத்துவதோடு வாசகர்களையும் பாதிக்கிறது.ஓவ்வொரு மனிதரும்..ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்கென்று ஒரு தனித்துவம் பெற்றவர்கள்.மற்றவர்களின் படைப்புகளை விமர்சனம் செய்பவர்கள் குரிப்பிட்ட நபரை காயப்படுத்தாமல் ,அந்த படைப்பினில் உள்ள குறைகளை நல்ல முறையில் சுட்டிக் காட்டுதல் நலம்.ஒருவர் மற்றவரையும்,மற்றவர் அவரையும் திட்டுவது ஒரு சுழல் முறை பழக்கமாகி விடக்கூடாது.மற்றவர் சொல்லும் நல்ல கருத்துக்களை துளியளவும் விமர்சிக்காமல் அவரின் தவறான கருதுக்களை மட்டும் பெரிது படுத்துவது வக்கிர புத்தியின் வெளிப்பாடு.
நம் தமிழ் உலகிள் ஒருவருக்கு அரசின் விருதோ தனியார் விருதோ கிடைத்தால் அதை மற்றவர்கள் விமர்சனம் செய்யும் முறையும் ..தங்களை தாங்களே அறிிவாளிிகள் என்றும்,தனக்கு தராமல் அவருக்கு போனது முட்டாள்தனம்,அரசியல்..அது இதுவென்ற ஆயிரம் சொல்லம்புகள் வீசி காயப்படுத்துதலும் கேவலமான பண்பாடு.
நான் திண்ணையின் ஒரு சாதரண வாசகன்.அவ்வப்போது மனது வலிக்கும் சில நேரங்களில் ..வருத்தமோ,கோபமோ ஏதாவது கிறுக்கி சமாதானமாகும் மனிதர்களில் ஒருவன்.சில மாதங்ளுக்கு முன் ஒரு கவிஞர் என்று என்னால் மதிக்கபட்ட ஒருவரை சந்தித்தேன்.அவரின் தற்பெருமை,எனது எழுத்துக்களை விமர்சித்த முறை(சில:..கவிதை ன்னா என்னன்னு தெரியுமா சார் உங்களுக்கு ?,நீங்களாம் ஏன் சார் எழுத முயற்சி செய்றீங்க ?,எனக்கு சரி சமமா உள்ளவங்க… கவிதைகளை பற்றி நான் பேசலாம்.உங்களை மாதிரி கத்துகுட்டிங்கல மதிக்க வேண்டிய அவசியம் இல்லை….,எனக்கு நேற்று தான் அங்க விருது தந்தாங்க..என்னுடய சிறுகதை சிறந்ததாக தேர்ந்தெடுக்க பட்டுருக்கு…).அவரிடம் பதில் பேசாமல் திரும்பினேன்.இது ஒரு நல்ல கவிஞரின் இயல்பு அல்லவே.அவரை பார்க்க போன என்னை நானே திட்டிக் கொள்வதா ?,அவர் மீது எனக்கும் என் மீது அவருக்கும் கோபம் இல்லையே!பின் ஏன் ?,என் எழுத்துக்கள் மேல் அவருக்கு கோபமாய் இருக்கலாம்! ?.அதை வெளிக்காட்டும் விதம் இதுவல்லவே!,அதன் பின் அவர் எனக்குள் சராசரி மனிதர்களுல் ஒருவர் ஆனார்.
பனம் தேடலே வாழ்வென்ற உலகில்,தமிழுக்காய் நேரம் ஒதுக்கி படைப்புகள் படைக்கும் மனிதர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.படைப்புகளின் தரம் அவரவர் பார்வைகளை பொறுத்தது.கொலை,கொள்ளை,கற்பழிப்பு,அரசியல் அநாகரீகம்,பசி,பட்டினி சாவுகள் பற்றிய செய்திகள் படித்து படித்து நொந்து போன உலக தமிழர்களின் சந்தோசம் நமது படைப்பாளிகளின் படைப்புகளும் பார்வைகளும்.நாமோ எழுதுபவர்களின் இதயத்தில் மோசமான விமர்சனங்களால் குத்தி விரல்களை செயல் இழக்கச் செய்கிறோம்.இனியாவது ஆரோக்யமான விமர்சனங்களும்,சின்ன புன்முறுவல் களும் நமக்குள் பரிமாறப் படுவது நலம்.
உணர்வுகளுடன்,
மீ.வசந்த்
vasantham_2000@yahoo.com
- நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா
- கடிதம் பிப்ரவரி 25,2005
- பி.ஏ கிறிஷ்ணனின் புலிநகக்கொன்றை
- ஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்
- கோட்டல் ருவண்டா
- கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா
- பெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –
- யார் செய்யிறது, யார் பேர் வாங்குறது ? (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)
- பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி! பூகோளக் கடற்தளங்கள் நீட்சி! (Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2]
- எர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி
- சரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்
- வருத்தமுடன் ஓர் கடிதம்
- கடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா
- சக்தி
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்
- சிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்
- குறும்படப்போட்டி
- ரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005
- கடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு
- கடிதம் பிப்ரவரி 25,2005
- கடிதம் பிப்ரவரி 25,2005
- ஞானவாணி விரூது 2004
- கோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் ?
- அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…
- பெரியபுராணம்- 30
- தமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்
- தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்
- மேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்
- தண்டனை.
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)
- பேஜர்
- து ை ண :4 ( குறுநாவல்)
- ஐூலியாவின் பார்வையில்….
- பறவைகளும் துப்பாக்கிரவைகளும்
- கலைஞன்.
- தமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.
- சன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘!
- சுகிர்தங்கள் புலரும் கனவு
- பார்க்கிறார்கள்
- நம்பிக்கை
- நவீனத்தின் அளவு
- கீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)
- புறாக்களுடன்.
- சிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்
- சூடான்: தொடரும் இனப் படுகொலை
- கனவுகள் கொல்லும் காதல்
- அறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)
