- பசிக்கிறது!
- ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை ?
- சுடர்ப் பெண்கள் சொல்லும் இரகசியம்.
- புகழின் நிழல்
- என் விடுமுறை
- விடியல்
- பழக்கமாகும்வரை…
- தோற்றுப்போகாதே….
- கொலுசுகள்.
- இருவர்
- ஜனநாயக அராஜகம்
- ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை ?
- நகர்வாசமும் வீடுபெறலும்
- அஹிம்சையில் எதிர்ப்பு -2
- இந்த வாரம் இப்படி (ஜெயலலிதா கட்டளை, முஷாரஃப் வருகை,காமராஜர் பிறந்த நாள்)
- தொலைதல்
- ‘கன்யாகுமரி ‘.ஏன் நம்மை சீண்டவேண்டும் ?
கோகுல கிருஷ்ணன்.

முட்டியை உடைத்துக்கொண்டு
இரத்தம் சிந்த வேண்டியிருந்தது
சைக்கிள் பழகும்வரை.
மூழ்கித் திணறி
மூச்சுத் தேடி
அப்பாவை இறுக்கிக் கொள்ள நேர்ந்தது
நீச்சல் பழகும்வரை.
முதன்முதலாய் வீட்டைப் பிாிந்தது
வேதனை தந்தது
கல்லூாி விடுதி பழக்கமாகும்வரை.
இரைச்சல் அணிந்த சாலைகளும்
இதயம் கழற்றிய மனிதர்களும்
வெறுப்பு வளர்த்தன
நகரம் பழக்கமாகும்வரை.
எல்லா சிரமங்களும்
பழக்கமாகும்வரைதான்.
எனவே கவலையில்லை,
பழகிவிடும்…
நீயற்ற மிச்ச வாழ்வும்.