செம்மதி
நான்கு வேலிகளுக்குள்
சிறைப்பிடிக்கப்பட்டது
எமது வாழ்வு
மிருகக் காட்சிச்சாலையில்
அடைக்கப்பட்ட
குரங்குகளைப்போல
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்க
நாம் காட்சிப்பொருள்
எங்களை வைத்தே
பல வித்தைகள் காட்டி
பணம் தேடுகிறார்கள்
பல சிம்மாசனம்
எம்மீதே போடப்பட்டுள்ளன
எமது அசைவுகள்
அவற்றை சாய்க்கா விட்டாலும்
ஆட்டம் காண வைக்கக்கூடியவை
நாம் காட்டு மூங்கில்கள் ஆனோம்
யுத்தம் எம்மீது பல
துளைகளை இட்டுள்ளது
வீசுகின்ற காற்றக்கள்
துளைகள் ஊடே சென்ற
பல நாதங்களை எழுப்புகின்றன
மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி
தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன
காலம் எமக்க
கடிவாளம் இட்டுள்ளது
எமது சிந்தனைகள்
திசை திருப்பப்படுகின்றன
கடிவாளத்தின் கயிறுகள்
இரண்டும் ஒருவன் கையில் இல்லை
இரண்டு கயிறுகளும் மாறிமாறி
இழுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
நாம் பயணிக்கவேண்டி பாதை
எமக்கு தெரிகின்றது
ஆனால் பாதங்கள்
பாதை மாற்றப்படுகின்றன
எவ்வாறு இருப்பினும்
நாளைய நம்பிக்கைகளுடன்
இன்றைய நமது
பொழுதுகள் களிக்கின்றன….
chemmathy@gmail.com
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது !
- தாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு !
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் ? (கட்டுரை: 36)
- National Folklore Support Center – July 29th
- இசை பிழியப்பட்ட வீணை
- மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்
- இவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி
- OH! presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- சொல்லப்படாத மௌனங்களினூடே
- பட்டிமன்றம்
- ‘a river flowing deep and wide’ premiere screening
- “உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்
- கண்ணதாசன் ரசித்த கம்பன் – 1
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா
- ‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா
- படைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்
- முனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி
- புத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்
- வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”
- கவிதைகள்
- என் ஜன்னலின் சினேகிதி !
- சாவுகிராக்கி
- வழிப்போக்கன்
- குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்
- கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- வெயில் பிடித்தவள்
- தாஜ் கவிதைகள்
- வயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்!
- திண்ணையர்கள்
- நாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..
- டிரைவருக்கு சலாம்