ஹெச்.ஜி.ரசூல்
நடுநிசியில் முளைத்த அதிசய செடி
விசித்திர மொழியில் பேசியது.
ரஜபுமாத இரவொன்றில்
அது கேவிக் கேவி அழுத சத்தத்தையும்
யாரோ கேட்டிருக்கிறார்கள்.
கபர்ஸ்தானத்தில் போர்த்திட நேர்ந்து
பட்டில் மகாம் மூடி வாங்கிக் கொடுத்த
திருப்தியில் வந்து போகும் நீ
இன்றிரவு முழுக்க எங்கோ போனாய்..
பாட்டு ராத்திரி வெறுமனவே காய்கிறது.
நேற்று முக்காடிட்டு வந்த பீவி
தன் ஒருவயதுக் குழந்தையை
மகாம் நடையில் வெற்றுடம்போடு வைத்தாள்
முப்பது ரூபாய் எண்ணிக் கொடுத்தவாறு
திருப்பி விலைக்கு வாங்கினாள்
தன் கைகளில் ஏந்தி
காற்றில் சுழன்றடித்துச் செல்லும்
சாம்பிராணி புகைமூட்டத்தில் மிதந்து செல்கின்றன
கண்மூடிக்கிடக்கும் நாசிக் குருவிகள்.
தைக்காகிணற்றில் எடுத்த
ஒரு குடம் தண்ணீர்
பிச்சிமாலையை கழுத்தில் சூடி
இரவு முழுதும் மகாமிற்குள் தன்னந்தனியே
இன்னொரு துணையின்றி
வெள்ளியில் தகடடித்த கண்ணொன்று
முழங்காலொன்று கையொன்று முகமொன்று
மார்பிரண்டு குறியொன்று யோனியொன்று
ஆணாகவும் பெண்ணாகவும்
பெண்ணாகவும் ஆணாகவும்
வெவ்வேறு அடையாளங்களுண்டு
பேசாத கண்ணை பேச வைக்க
பார்க்காத கண்ணை பார்க்க வைக்க
உடலும் மனமும் குலுங்கித் திரள
தலைவிரி கோலத்தோடு முட்டியும் மோதியும்
நெளிந்தும் புரண்டும் கூக்குரலிட்டும்
ஓசைகளின் பீதி உயர்கிறது.
உயிரை சிதைத்து படம் விரித்தாடும் ஆட்டம்
ஆடும் போதெல்லாம் தெரிகிறது
விட்டு விடுதலையாகும் வெறி
mylanchirazool@yahoo.co.in
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- ஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தொடங்கிய அதிகாரப் பூர்வக் கணக்கு!
- புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள்
- சிட்டுக்குருவி
- தாகூரின் கீதங்கள் – 38 புயலுடன் வந்தார் வேந்தர் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 14 (சுருக்கப் பட்டது)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முதிய விண்மீன்கள் மூலகக் களஞ்சியம் !(Abundance of Elements in Old Stars) (கட்டுரை: 33)
- கே.எஸ்.சுதாகரின் எங்கே போகிறோம்
- “இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ்
- கடிதம்
- மந்திரியின் நலத்திட்டங்கள்
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா
- வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன்
- நாய்வால் திரைப்பட இயக்கம் – அடுத்த நிகழ்வு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 26 ரா.ஸ்ரீ.தேசிகன்
- எமிலி ஸோலா
- மனேக் ஷா – ஓர் பட அஞ்சலி
- மாய உலகம்
- கவிதைகள்
- தைக்காமுற்றத்தின் அதிசய செடிகள்
- அசோகவனங்கள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 26 சூடான நள்ளிரவுக் கண்ணீர் !
- பள்ளத்தில் நெளியும் மரணம்
- தாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா?
- குடிமகன்
- தேடலின் தொடக்கம்