This entry is in the series 20020407_Issue


1 கோப்பை உளுந்தம்பருப்பு

1 தேக்கரண்டி அரிசி மாவு

தேவைக்கேற்ப உப்பு

எண்ணெய் வறுக்க

தேங்காய்ப்பால் செய்ய

ஒரு மூடி தேங்காயைத் துருவி பிழிந்து பாலெடுத்துக்கொள்ளவும்

சர்க்கரை தேவைக்கேற்ப, ஏலக்காய் பொடி செய்து போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்

போண்டா செய்ய

உளுந்தம்பருப்பை ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் உப்புக்கலந்து எண்ணெயில், பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இவற்றை தேங்காய்ப்பாலில் போட்டு சிறிது நேரம் ஊறியவுடன் பரிமாறலாம்.

Series Navigation