அன்பன் சைதன்யா
—-
பாடல்/1
—
இயற்கை இறங்கச் சொன்னது
செயற்கை இழுத்துச் சென்றது
இயற்கை கனவு தந்தது
செயற்கை களவு செய்தது
—
தாவித் திரியும் கன்றுக்குட்டி
கயிறு மாட்டிக் கொண்டது
கூவித் தரியும் கிளிகளுமே
கூண்டுக்குள்ளே போனது
இயற்கை இறங்கச் சொன்னது
செயற்கை இழுத்துச் சென்றது
—
கல்லில் நிழல்குடை பஸ் நிறுத்தம் – அது
ஒருகால் விருட்சம் நின்ற இடம்
சொல்லில் செயலில் உலகமும் சகலமும்
கற்பனை ஒப்பனை மிகவாய்ப் போச்சு
இயற்கை இறங்கச் சொன்னது
செயற்கை இழுத்துச் சென்றது
—
காற்று விட்டது பெருமூச்சு அதில்
காதலின் முகமே கறுப்பாய் ஆச்சு
நேற்றின் சுவடுகள் நினைவில் இல்லை
இன்றின் கசடுகள் நிதமும் தொல்லை
இயற்கை இறங்கச் சொன்னது
செயற்கை இழுத்துச் சென்றது
—
பூமியின் தனமும் கலப்படப் பாலை
ஊற்றித் தருகிற ஊழிக்காலை
மனிதா அனைத்தும் நின்செயல் அன்றோ
நின்தலை மண்ணே அட்சதை நன்றோ
இயற்கை இறங்கச் சொன்னது
செயற்கை இழுத்துச் சென்றது
—
காதல் கவிதை வாழ்க்கை சிவிகை
சிந்தனை நன்று வாழிய நின்று
நாதம் இழையும் நரம்புகள் இழையை
நாமே முன்சென்று அறுத்தல் பிழையே
வாழிய மனிதர் வாழிய உயிர்கள்
சூழிய நலம்பெற காளி யருள்க
————
/பாடல் 2/
————
அழகு அழகு
அழகு அழகு
பூமியில் அழகாய் எதுதான் இல்லை
பூமிக்கு நிகராய் எதுவும் இல்லை
அன்னை அழகு அரவிந்தர் அழகு
அறிவின் சுடராய் அனைத்தும் அழகு
அழகு அழகு
அழகு அழகு
—
இளமையில் காதல் கனவுகள் அழகு
அழகு அழகு
அழகு அழகு
முதுமையில் ஞானம் மிகவாய் அழகு
பூமியில் அழகாய் எதுதான் இல்லை
பூமிக்கு நிகராய் எதுவும் இல்லை
அழகு அழகு
அழகு அழகு
—
கல் அழகு
கல்லில் கடவுளை வணங்குதல் அழகு
அழகு அழகு
அழகு அழகு
பசி அழகு உணவே அழகு
பசி நிறைந்திட்டால் சகலமும் அழகு
பூமியில் அழகாய் எதுதான் இல்லை
பூமிக்கு நிகராய் எதுவும் இல்லை
அழகு அழகு
அழகு அழகு
—
கனி அழகு கனிமரம் அழகு
காட்சிகள் அழகு கண்ணின் அழகு
அழகு அழகு
அழகு அழகு
பனி அழகு பனிதரும் சிகரம்
நுனிப்புல் அழகு நுண்புலம் அழகு
பூமியில் அழகாய் எதுதான் இல்லை
பூமிக்கு நிகராய் எதுவும் இல்லை
அழகு அழகு
அழகு அழகு
—
சிரிப்பழகு சிந்தனை அழகு
சிந்தனை நடுவே சிரிப்பது அழகு
அழகு அழகு
அழகு அழகு
மண்அழகு மன்பதை அழகு
மன்பதை பேணும்
மனமழகு
அன்னை அழகு அரவிந்தர் அழகு
அழகின் நிரந்தரம் அவரிடம் பழகு
பழகு பழகு
பழகு பழகு
பூமியில் அழகாய் எதுதான் இல்லை
பூமிக்கு நிகராய் எதுவும் இல்லை
அழகு அழகு
அழகு அழகு ……..
from the desk of sankarfam@vsnl.net
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]
- முதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி
- நீலக்கடல் – அத்தியாயம் 1
- ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)
- பாரதி இலக்கியச் சங்கம்-சிவகாசி
- அவதூறுகள் தொடாத இடம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் ? ‘
- கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை
- வெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
- மூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.
- எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்
- புரியாத புதிது
- வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘
- கவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்
- நீளப் போகும் பாதைகள்
- தேவதேவனின் மூன்று கவிதைகள்
- இரவின் அழகு
- மூன்று
- நிழல்கள்
- பரவச கவிதைகள் சில
- தி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…
- வானவில்
- கவிதைகள்
- பெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.
- மின் ஆளுகை (E-Governance)
- அன்புள்ள செல்வி.ஜெயலலிதாவிற்கு
- தமிழ் ஒழிக!
- வாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது
- கடிதங்கள் – ஜனவரி 8,2004
- சில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்
- பொங்கலைத் தேடி…
- நேற்று, இன்று, நாளை
- ‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது
- மனமென்னும் காடு-அலைந்ததும் அடைந்ததும்
- ஒளிரும் காரிருள்
- பொங்கலோ பொங்கல்
- உலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்! (டிசம்பர் 2003)
- அஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)
- பின்னல்
- இந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்
- நாடகமேடை
- மின்சாரமில்லா இரவு
- அன்புடன் இதயம் – 2
- நீ வருவாயா ?
- கிறிஸ்மஸ் விடுமுறை
- வாருங்கள்
- நீ ஏன்…
- விடியும்! -நாவல்- (30)