This entry is in the series 20010505_Issue

ஜெயானந்தன்.


தினம்தினம் சாய்ந்தே ஓடும்
20சி.
அதே பவுடர் வாசனையுடன்
பதினெட்டும்,முப்பத்தியாறும்
குலுங்கும் வண்டியுடன்.
சக்கரக்கண்களுடன் வல்லூறுகள்,
வயிற்றுச் சதை மடிப்புக்குள்
சில்லறை எண்னும் வாலிபங்கள்.
மங்களச் சரடுக்காக ஏங்கும்
பேதை நெஞ்சங்கள்.
எக்ஸ்போர்ட்டு குகைகளில்
எரியும் இளமை வேள்விகள்.
சாயங்கால நெரிச்சலுக்காக
காத்து நிற்கும்
ஹகோர்ட் குமாஸ்தாக்கள்
பையில் மல்லிகைப் பூவுடன்.
ஓசியில் கிடைக்கும்
உராய்விற்கு ஏங்கி
தாம்பத்யம் இழப்பான்
வரும்போகும் சம்சாரி.

Series Navigation