This entry is in the series 20070628_Issue

இமாம்.கவுஸ் மொய்தீன்



நீ
ஏணியாய்
இருந்து விடாதே!
உன்னை
மிதித்து
உயரே செல்வோர்
உன்னை
உதைத்துக்
கீழே தள்ளுவர்!
நீ
மிதிப்பவரை
மிதி!
மதிப்பவரை
மதி!

நீ
வாழ்வாய்!!

நீ
பாதையாய்
இருந்து விடாதே!
காரியக்காரர்கள்
உன்னைப்
பயன்படுத்தி
தாம்
சேரவேண்டிய
இடங்களைச்
சேர்ந்திடுவர்!
நீ
பாதையாகவே
இருந்து விடுவாய்!
ஜாக்கிரதை!
-இமாம்.கவுஸ் மொய்தீன்.


vdrimamgm@hotmail.com

Series Navigation