தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
இவ்வுலகை விட்டு நீங்கும் போது,
நான் கூறப் போகும்,
பிரிவுரை இதுவாக இருக்கும்:
பூமியில் நான் கண்டது உன்னத மானது!
தாமரைப் பூவில் மறைந்துள்ள
தேமதுவைச் சுவைத்தேன்!
விரிந்து அது ஒளிக்கடலாய்ப்
பரவியது எனக்கோர் வெகுமதி!
அது நான் கூறும் பிரிவுரை யாகட்டும்!
முடிவில்லாத
வடிவங்கள் கொண்ட,
இந்தப் பந்தய அரங்கில்
முடிந்தது என் விளையாட்டு!
வடிவ மற்ற ஆதிமூலனின்
மகத்தான தோற்றத்தைக்
கண்டேன்!
எவருக்கும் எட்டாத அவனது
தொடுகையால்
என் உடல் பூராவும்,
எனது உறுப்புகள் அனைத்தும்,
பூரித்துப்
பொன்னூஞ்சல் ஆடின!
அது நான் கூறும் பிரிவுரை ஆகுக!
என் ஆயுள் முடியட்டும்,
நீங்கும் வேளை எனக்கு
நெருங்கி விட்டால்!
*****************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 22, 2006)]
- மௌனத்தின் அலறல்
- துண்டு துண்டாக்கப்பட்ட நான்கு பட்சிகளின் உடல்கள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5, காட்சி:1) ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்
- கணக்கதிகாரம் பேசும் சதுரங்க செய்திகள்
- உயிர்ப்புள்ள மனமும் மறதிப் பெருவெளியும்
- தாஜ் கவிதைகள்
- இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம், நீதி மன்றங்கள்: ஒரு கேள்வி பதில்
- பண்டைத் தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி- தூரம்
- தந்தைமை என்னும் உணர்வு – “அப்பா”- ஈரானியத் திரைப்பட அனுபவம்
- வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு
- வாணர்களும் விந்தியமலையும்
- கடித இலக்கியம் – 28
- காசும் கரியும் !
- அலெக்ஸாண்டர் பாரத மண்ணில் தோல்வியை சந்தித்தான்
- பெண்கள் சந்திப்பு 2006
- கடிதம்
- இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!
- கருமையம் நிகழ்ச்சி – தொடரும் முஸ்லிம்களின் அவலங்கள்
- அஞ்சலிக் கூட்டம் – ஏஜே என்னும் பேரறிவாளன்
- வைதீஸ்வரனின் கவிதைகள்
- உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 8
- இரவில் கனவில் வானவில் – 8
- நாலந்தாவின் மரணம் : வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து..
- பேசும் செய்தி – 5 :: பாஸ்டன் பாலாஜி
- பெரியபுராணம் — 109 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- சிந்தனையில் சிலநேரம்
- கீதாஞ்சலி (96) – எனது பிரிவுரை!
- அவலம்
- பதஞ்சலியின் சூத்திரங்கள் – 1
- நேற்று ! இன்று ! நாளை !
- இலை போட்டாச்சு !
- மடியில் நெருப்பு – 9
- National folklore support center